Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - அக்கம் பக்கத்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்..!
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து அருகில் வசிக்கும் மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கர்நாடக மாநில தேசிய செடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து, உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏன் இந்த மகிழ்ச்சி என்கிறீர்களா? அதற்கான விடையை வரும் ஸ்லைடர்களில் காணுங்கள்.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதிக்கு அருகே கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை கேள்விப்பட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்து மக்களுக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. காரணம் விபத்துக்குள்ளான லாரி மதுக்கடைகளுக்கு பீர் உள்ளிட்ட மதுபானங்களை ஏற்றி வந்த லாரியாகும்.
இந்த லாரியில் இருந்த மதுபான பண்டல்கள் சாலையெங்கும் சிதறி கிடந்துள்ளது.
இதில் உடைபடாத பீர் உள்ளிட்ட மதுபான பாட்டில்களை எடுக்க அங்கிருந்த மக்கள் பலரும் அந்த இடத்தில் குவிந்தனர்.
ஆளாளுக்கு தங்கள் கைக்களுக்கு கிடைத்த 10, 15 பாட்டில்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அள்ளிச்சென்றனர். பெரும் திரளான பேர் உடையாத பாட்டில்களை சேகரிக்க குவிந்ததால் அங்கு 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அது பாட்டில் சேகரிக்க வந்தவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காவல்துறையினர் வருவதற்குள் அங்கிருந்த மதுவகைகளை அள்ளிச்சென்றதை பார்க்க முடிந்தது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்று இவ்வளவு பேருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் அந்த வழியாக கடந்து சென்றவர்களுக்கு வேடிக்கை மற்றும் வினோத உணர்வை ஏற்படுத்தியாக சிலர் கூறினர்.
நல்லவேளையாக விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் சாலையில் கொட்டியும், பலரால் எடுத்துச்செல்லப்பட்டதாலும் நாசமாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து குடிமகன்கள் பாட்டில்களை அள்ளிச்செல்லும் காட்சிகளை ஒருவர் வீடீயோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை மேலே காணுங்கள்..
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!