Just In
- 25 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 59 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - அக்கம் பக்கத்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்..!
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து அருகில் வசிக்கும் மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கர்நாடக மாநில தேசிய செடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து, உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏன் இந்த மகிழ்ச்சி என்கிறீர்களா? அதற்கான விடையை வரும் ஸ்லைடர்களில் காணுங்கள்.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதிக்கு அருகே கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை கேள்விப்பட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்து மக்களுக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. காரணம் விபத்துக்குள்ளான லாரி மதுக்கடைகளுக்கு பீர் உள்ளிட்ட மதுபானங்களை ஏற்றி வந்த லாரியாகும்.
இந்த லாரியில் இருந்த மதுபான பண்டல்கள் சாலையெங்கும் சிதறி கிடந்துள்ளது.
இதில் உடைபடாத பீர் உள்ளிட்ட மதுபான பாட்டில்களை எடுக்க அங்கிருந்த மக்கள் பலரும் அந்த இடத்தில் குவிந்தனர்.
ஆளாளுக்கு தங்கள் கைக்களுக்கு கிடைத்த 10, 15 பாட்டில்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அள்ளிச்சென்றனர். பெரும் திரளான பேர் உடையாத பாட்டில்களை சேகரிக்க குவிந்ததால் அங்கு 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அது பாட்டில் சேகரிக்க வந்தவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காவல்துறையினர் வருவதற்குள் அங்கிருந்த மதுவகைகளை அள்ளிச்சென்றதை பார்க்க முடிந்தது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்று இவ்வளவு பேருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் அந்த வழியாக கடந்து சென்றவர்களுக்கு வேடிக்கை மற்றும் வினோத உணர்வை ஏற்படுத்தியாக சிலர் கூறினர்.
நல்லவேளையாக விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் சாலையில் கொட்டியும், பலரால் எடுத்துச்செல்லப்பட்டதாலும் நாசமாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து குடிமகன்கள் பாட்டில்களை அள்ளிச்செல்லும் காட்சிகளை ஒருவர் வீடீயோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை மேலே காணுங்கள்..
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!