Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடேங்கப்பா... 50,000 ரூபா ஸ்கூட்டருக்கு 8 லட்சத்தில் பேன்ஸி நம்பர்!!
புதிய வாகனங்களுக்கு பேன்ஸி பதிவு எண் பெறுவதை ஒரு பேஷனாகவும், கவுரவமாகவும் கருதுகின்றனர். குறிப்பாக, சண்டிகர் நகரில் இந்த பேன்ஸி நம்பருக்கான மவுசு மிக அதிகம். இதனால், அங்குள்ள ஆர்டிஓ., அதிகாரிகள் பேன்ஸி பதிவு எண்களை தேர்வு செய்து ஏல முறையில் விற்பனைக்கு விடுகின்றனர். இதனால், அந்த ஆர்டிஓ.,வுக்கு வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகிறது.
அங்கு, பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து பேன்ஸி நம்பரை பணக்காரர்கள் வாங்குவது குறித்து ஏற்கனவே நாம் செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில், சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் இதுபோன்று அதிக தொகைக்கு பேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வாங்கியிருக்கும் ஸ்கூட்டரின் மதிப்பைவிட 16 மடங்கு கூடுதலான தொகை கொடுத்து அந்த பேன்ஸி நம்பரை ஏலத்தில் விடாப்பிடியாக எடுத்துதுதான் இப்போதைய பரபரப்பு.
தொழிலதிபர்
சண்டிகர் நகரை சேர்ந்த கன்வால்ஜித் வாலியா என்பவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதில், நல்ல வருமானம் கிடைப்பதால் அவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலைதான். அதனால், அவர் செய்த காரியம்தான் இப்போது பரபரப்புக்கு காரணம்.
புது ஸ்கூட்டர்
சமீபத்தில் கன்வால்ஜித் வாலியா புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரை வாங்கினார். அதற்கு பேன்ஸி நம்பரை வாங்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று சண்டிகர் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் கலந்து கொண்டார். ஆனால், அவர் விரும்பிய பேன்ஸி நம்பருக்கு கடும் நிலவியது.
விடாப்பிடி
கடும் போட்டி நிலவியதை கண்டு அசராத, எவ்வளவு தொகையானாலும் கொடுத்து ஏலம் எடுக்க முடிவு செய்தார். அதன்படி, ரூ.8.10 லட்சத்தை கொடுத்து அவர் விரும்பிய அந்த பேன்ஸி நம்பரை கைப்பற்றினார். அதாவது, அவரது ஸ்கூட்டரின் விலையைவிட 16 மடங்கு கூடுதல் தொகையை கொடுத்து அந்த நம்பரை வாங்கினார்.
பேன்ஸி நம்பர்
கடும் போட்டிக்கு மத்தியில் அவர் வாங்கியிருக்கும் பேன்ஸி நம்பர் CH01BC 0001 என்பதாகும். இதுதவிர, தனது மகனின் புதிய க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிளுக்கு CH01BC 0011 என்ற பேன்ஸி நம்பரையும், அவர் புதிதாக வாங்கியிருக்கும் எஸ்யூவி வகை காருக்கு CH01BC 0026 என்ற பேன்ஸி நம்பரையும் ரூ.2.6 லட்சம் கொடுத்து அன்றைய தினத்தில் வாங்கியுள்ளார்.
தந்தை வழியில்...
சண்டிகர் டாக்ஸி தொழிற்சங்கத்தை துவங்கிய, தனது தந்தை இதேபோன்று கார்களுக்கு பேன்ஸி நம்பரை வாங்குவதை பழக்கமாக கொண்டிருந்ததாகவும், அதே வழியில் தானும் இந்த பேன்ஸி நம்பர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும் கூறியுள்ளார் கன்வால்ஜித்.
ஏலத்தொகை
கடந்த சனிக்கிழமை சண்டிகர் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்த பேன்ஸி நம்பர் ஏலத்தின் மூலம் அந்த ஆர்டிஓ., அலுவலகத்துக்கு ரூ.77.71 லட்சம் வருவாய் கிட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.