Just In
- 2 hrs ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 3 hrs ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 5 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 10 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- News எம்பி சீட் கிடைக்காததால்தான் கணேசமூர்த்தி உயிரை விட்டாரா.. உண்மையல்ல.. வைகோ மறுப்பு
- Movies இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கிடப்பில் கிடந்த சென்னை பறக்கும் சாலை திட்டம்; 6 ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெறுகிறது: முழு தகவல்கள்
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கான கட்டமைப்பு பணிகள் 6 வருடத்திற்கு பிறகு தொடங்கின.
பன்னாட்டு ஏற்றுமதிக்காக சென்னையில் அமைக்கப்பட இருந்த பறக்கும் சாலை திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர் பெறுகிறது.
சென்னை துறைமுகத்திற்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பன்னாட்டு ஏற்றுமதிக்காக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல சிறப்பு வழித்தடம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மதுரவாயல் வரை ஏற்கனவே உள்ள சாலை வழியாக வரும் வாகனங்களுக்கு, மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி செல்ல புதிய உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு சென்னை பறக்கும் சாலை திட்டம் (Chennai Express Way) என்று பெயரிட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள் தொடங்கியது.
ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருந்த இத்திடத்திற்கு 2007ம் ஆண்டு, அப்போதைய பிரமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டது.
அதன்படி, 2012ம் ஆண்டில் பறக்கும் சாலை திட்டத்திற்காக 30 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்த வேளையில், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஜெயலலித்தா மறைவிற்கு பிறகு பல நெருக்கடியான சூழலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்றார்.
கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி சென்றிருந்த அவர், அங்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதற்கு பிறகு அன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை அமைக்கப்பட இருந்த பறக்கும் சாலை திட்டத்திற்கான பணிகள் மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார்.
அதன்படி மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ள பறக்கும் சாலை திட்டப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.
பறக்கும் சாலை திட்டம் மட்டும் சென்னையில் நிறைவேற்றப்பட்டால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்தை 30 நிமிடங்களில் அடைந்து விடும்.
மேலும் மதுரவாயல் முதல் மெரீனா கடற்கரையை 15 நிமிடங்களில் அடைந்துவிட முடியும்.
சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி , பொதுமக்கள் போக்குவரத்திற்கும் பறக்கும் சாலை திட்டம் பெரிய உதவியாக இருக்கும்.
இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் சென்னை போக்குவரத்து கட்டமைப்பு பறக்கும் சாலை திட்டம் தேசியளவிற்கு கவனம் பெறும்.