Just In
- 1 hr ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 2 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 3 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News தென்னிந்தியாவில் பாஜக எத்தனை சீட்களில் வெல்லும்! வந்து விழுந்த கேள்வி.. ரேவந்த் ரெட்டி பளிச் பதில்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Movies யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!
சீனாவில் புதிய புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த புதிய புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய புல்லட் ரயில் குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஃபக்ஸிங் என்ற பெயரில் இந்த புதிய புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் சிஆர்400ஏஎஃப் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. முழுக்க முழுக்க சீனாவிலேயே இந்த புதிய தலைமுறை புல்லட் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும். சராசரியாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீனத் தலைநகர் பீஜிங் நகரிலிருந்து ஷாங்காய் நகருக்கான வழித்தடத்தில் இந்த புதிய புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரு நகரங்களையும் இந்த புல்லட் ரயில் 5 மணி 45 நிமிடங்களில் இணைக்கிறது.
வழியில் ஜினான், ஷாங்டாங் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் நின்று செல்கிறது. தற்போது பீஜிங்- ஷாங்காய் இடையிலான வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் பயணிகள் செல்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய புல்லட் ரயில்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்த புதிய புல்லட் ரயில்கள் வேகத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு அம்சங்களிலும் மிகவும் சிறந்தவை. அசாதாரண சூழல்நிலைகளில் தானியங்கி பிரேக் மூலமாக ரயிலை நிறுத்தும் வசதி இருக்கிறது.
மேலும், ரயிலின் இயக்கம், தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து எளிதாக கண்காணித்து எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் இந்த புல்லட் ரயில்கள் பெற்றிருக்கின்றன.
ரயில் பயணிக்கும் இடம் மற்றும் அதன் இயக்கம் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
உலகிலேயே மிகப் பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பை சீனா பெற்றிருக்கிறது. சீனாவில் 22,000 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. உலகிலுள்ள புல்லட் ரயில் வழித்தடங்களை ஒப்பிடும்போது, 60 சதவீத அளவிற்கான புல்லட் ரயில் கட்டமைப்பு சீனாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Picture credit: news.cn & chinanews.com
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு