Just In
- 31 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எதிர்ப்பு எதிரொலி: மைல்கற்களில் இந்திக்கு பதில் மீண்டும் இடம்பிடித்த ஆங்கிலம்!
தமிழக நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் எழுதப்பட்டு வந்த இந்தி எழுத்துக்களுக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சில ஊர்களின் பெயர் பலகைகள், மைல் கற்கள் ஆகியவற்றில் கடந்த ஒரு மாதமாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டு வந்தன. கடும் சர்ச்சைக்கு உள்ளான இப்பிரச்சனை தற்போது நெடுஞ்சாலை ஆணையம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் மைல் கற்களிலும் உள்ள ஊரின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டு வந்தன.
நெடுஞ்சாலைத்துறையின் இச்செயலால் தமிழ் மற்றும் இந்தி தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மேலும் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், மைல்கற்களில் பழைய முறையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்திலேயே எழுதுமாறு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களும், தமிழக அரசியல்கட்சியினர் பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதன்காரணமாக, இந்தியில் எழுதப்படுவதற்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாக தற்போது பழைய நிலையில், மைல்கற்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன.
வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள மைல்கற்களில் தமிழில் பெயர்களை மாற்றி எழுதி வருகிறது நெடுஞ்சாலை ஆணையம்.
கடந்த ஒரு மாத காலமாக ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக இந்தியில் எழுதப்பட்டு வந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலத்தில் எழுத்துக்களை மாற்றி எழுதி வருகின்றனர் நெடுஞ்சாலை ஊழியர்கள்.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்தி தெரியாத பலரும் சுலபமாக இடங்களை தெரிந்து கொள்ள முடிவதாகவும் கூறுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையின் இந்த முடிவிற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!