Just In
- 32 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 54 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை: காந்தாஸ் அறிமுகப்படுத்துகிறது
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டனுக்கு உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை காந்தாஸ் நிறுவனம் துவங்க இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டெல்லியிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம் துவங்கியது. மிக வெற்றிகரமாக இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதைவிட கூடுதல் தூரம், நேரம் பயணிக்கும் விமான சேவையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் 17.5 மணிநேரம் இடைநில்லாமல் பறந்து இந்த இரு நகரங்களையும் இணைக்க இருக்கிறது.
இந்த நீண்ட தூர பயணத்திற்கு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை காந்தாஸ் நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது. இதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் அடுத்த ஆண்டு டெலிவிரி பெறப்பட உள்ளன.
பெர்த்- லண்டன் இடையிலான 14,466 கிமீ தூரத்திற்கு இந்த விமானம் இடைநில்லாமல் பயணிக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விமான சேவைக்கான முன்பதிவு துவங்கப்படும். 2018ம் ஆண்டு இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வகையில், இலகு எடை கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதாவது, இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில் 15,190 கிமீ தூரம் பறந்து செல்லும் திறன் கொண்டது. அதிக எரிபொருள் சிக்கனம் தருவதால், கட்டணமும் நியாயமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஜிஇ எலக்ட்ரிக் அல்லது ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த விமானமானது மணிக்கு 945 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. சராசரியாக 903 கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.
அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசான பயணத்தை வழங்கும் இந்த விமானங்கள் இந்த நீண்ட தூர பயண வழித்தடத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. போயிங் 787 விமானத்தில். 242 பயணிகள் முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கின்றன. இரண்டு பைலட்டுகள் இந்த விமானத்தை இயக்க முடியும்.
இன்றைய மதிப்பில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,500 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. வசதிகள், இருக்கை அமைப்பு, எஞ்சின் தேர்வு உள்ளிட்டவற்றை பொறுத்து விலையில் மாறுபாடுகள் இருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு உலகின் மிக நீண்ட தூர விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிங்கப்பூர்- நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 16,500 கிமீ தூரத்தை 19 மணிநேரத்தில் இந்த விமானம் கடக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விமான சேவையை துவங்குவதற்கான திட்டம் உள்ளது.