Just In
- just now புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 11 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 54 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திருட முடியாத விரக்தியில் சொகுசுக்கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய சைக்கோ திருடர்கள்...!
திருடச் சென்ற கார்களை தீயில் கொளுத்திய சைக்கோ திருடர்களின் செயல் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
பெண்ட்லி, பிஎம்டபிள்யூ போன்ற காஸ்ட்லி கார்களை திருட முடியாத விரக்திலில் சைக்கோ திருடர்கள் இருவர் அவற்றை தீ வைத்து எரித்து சாம்பலக்கியுள்ள சம்பவம் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் வெளிவந்து அதிர்ச்சியில் உறையவத்துள்ளது.
டெல்லி அருகேயுள்ள குர்கானின் செக்டர்-15 பகுதியில் காஸ்ட்லி கார்கள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளயில் அங்கு சென்றுள்ளனர்.
ஹோண்டா அமேஸ் செடன் காரில் சென்ற கொள்ளையர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காஸ்ட்லி சொகுசுக் கார்களை திருட முயன்றுள்ளனர். எனினும் அவற்றை கொள்ளையடிக்க முடியாத விரக்தியில் கார்களுக்கு தீ வைத்துவைத்து எரித்துள்ளனர் அந்த சைக்கோ திருடர்கள்.
இந்த சம்பவத்தில் ஒரு பெண்ட்லி, ஒரு பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் மற்றும் ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் என மூன்று விலையுயர்ந்த கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை 3 மணி என்பதால் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கவில்லை, ஆயினும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளூர் காவல் நிலையல் இருக்கிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது திடுக்கிடும் உண்மை அவர்களுக்கு தெரியவந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளை முயற்சி சம்பவம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில் கார்களின் பூட்டை உடைக்க திருடர்கள் முயன்று அது பலனளிக்காததால் மூன்று கார்களுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர்.
திருடர்கள் இருவரும் ஹோண்டா அமேஸ் காரில் வந்திருப்பதும் அதில் பதிவாகியிருந்தது, தாங்கள் வைத்த தீ அணைந்துவிடாமல் எரிந்து கார்கள் முழுவதும் எரிகிறதா என்பதனை உறுதி செய்யும் விதமாக 45 நிமிடங்கள் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்து திருடர்கள் கண்கானித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் அப்போது ஒரு போலீஸ் வாகனம் அந்த பகுதியை கடந்து செல்வதும் நன்றாக பதிவாகி இருந்தது. பாராமுகமாக சென்ற காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் திருடர்கள் தப்பிச் செல்லாமல் தடுத்து கைது செய்யப்பட்டிருக்கலாம்.
தற்போது தலைமறைவாகிவிட்ட சைக்கோ திருடர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!