Just In
- 1 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருட முடியாத விரக்தியில் சொகுசுக்கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய சைக்கோ திருடர்கள்...!
திருடச் சென்ற கார்களை தீயில் கொளுத்திய சைக்கோ திருடர்களின் செயல் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
பெண்ட்லி, பிஎம்டபிள்யூ போன்ற காஸ்ட்லி கார்களை திருட முடியாத விரக்திலில் சைக்கோ திருடர்கள் இருவர் அவற்றை தீ வைத்து எரித்து சாம்பலக்கியுள்ள சம்பவம் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் வெளிவந்து அதிர்ச்சியில் உறையவத்துள்ளது.
டெல்லி அருகேயுள்ள குர்கானின் செக்டர்-15 பகுதியில் காஸ்ட்லி கார்கள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளயில் அங்கு சென்றுள்ளனர்.
ஹோண்டா அமேஸ் செடன் காரில் சென்ற கொள்ளையர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காஸ்ட்லி சொகுசுக் கார்களை திருட முயன்றுள்ளனர். எனினும் அவற்றை கொள்ளையடிக்க முடியாத விரக்தியில் கார்களுக்கு தீ வைத்துவைத்து எரித்துள்ளனர் அந்த சைக்கோ திருடர்கள்.
இந்த சம்பவத்தில் ஒரு பெண்ட்லி, ஒரு பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் மற்றும் ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் என மூன்று விலையுயர்ந்த கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை 3 மணி என்பதால் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கவில்லை, ஆயினும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளூர் காவல் நிலையல் இருக்கிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது திடுக்கிடும் உண்மை அவர்களுக்கு தெரியவந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளை முயற்சி சம்பவம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில் கார்களின் பூட்டை உடைக்க திருடர்கள் முயன்று அது பலனளிக்காததால் மூன்று கார்களுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர்.
திருடர்கள் இருவரும் ஹோண்டா அமேஸ் காரில் வந்திருப்பதும் அதில் பதிவாகியிருந்தது, தாங்கள் வைத்த தீ அணைந்துவிடாமல் எரிந்து கார்கள் முழுவதும் எரிகிறதா என்பதனை உறுதி செய்யும் விதமாக 45 நிமிடங்கள் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்து திருடர்கள் கண்கானித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் அப்போது ஒரு போலீஸ் வாகனம் அந்த பகுதியை கடந்து செல்வதும் நன்றாக பதிவாகி இருந்தது. பாராமுகமாக சென்ற காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் திருடர்கள் தப்பிச் செல்லாமல் தடுத்து கைது செய்யப்பட்டிருக்கலாம்.
தற்போது தலைமறைவாகிவிட்ட சைக்கோ திருடர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.