Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாகனங்களில் தனியாக செல்வோரிடம் கொள்ளையடிக்க திருடர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஃபார்முலா..!!
சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி கொள்ளையடிக்க திருடர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை காணலாம்.
நெடுஞ்சாலைகளில் அல்லது ஆள் அரவமற்ற சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், இல்லையெனில் நமக்கு ஆபத்து எந்த ரூபத்திலும் வரலாம். நாம் இங்கு குறிப்பிடுவது விபத்துக்களைப் பற்றி மட்டுமல்ல, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் கொள்ளையர்களால் ஏற்படும் ஆபத்தையும் பற்றித் தான்.
டெல்லியைச் சேர்ந்த கிஷோர் சர்மா என்பவர் தன்னுடைய நன்பர் ஒருவர் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அவரின் காரை நிறுத்த கொள்ளையர்கள் மேற்கொண்ட நூதன முயற்சி குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி அருகேயுள்ள நொய்டா, பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் கிஷோர் சர்மாவின் நண்பர் மதியம் ஒருமணியளவில் அவருடைய அலுவலக நண்பர் ஒருவருடன் மாருதி காரில் பயணித்துக்கொண்டிருந்தார்.
பயணத்தின் நடுவே சாலையோரமாக காரை அவர் நிறுத்தியிருந்த போது, நடுத்தர வயது கொண்ட இளைஞர் ஒருவர் சாலையின் மறுபக்கத்தில் இருந்து இவர்கள் காரின் அருகே வந்து, காரின் முன்பகுதியில் இருந்து ஆயில் கசிந்துகொண்டிருப்பதாக இவரிடம் கூறியுள்ளார்.
காரின் ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தான் இந்த இளைஞர் ஆயில் கசிவதாக தவறாக கருதி கூறியிருக்கிறார் என நினைத்து, காரை விட்டு இறங்கிப் பார்க்காமல் ஸ்டார்ட் செய்து தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.
இந்த சமயத்தில் அவரின் கண்களில் சிறிதளவு எரிச்சல் இருப்பதை உணர்ந்துள்ளார். பின்னர் அவர்களின் காருக்கு பின்னால் ஒரு பைக்கில் வந்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் இவரிடம் ஆயில் கசிவதாக சைகையில் கூறியுள்ளனர்.
நமக்கு பின்னால் இருந்து வருபவர்களால் எப்படி காரின் முன்னால் ஆயில் கசிவதை காண முடியும்? என அவருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. மேலும் காரின் ஆபத்துக் கால இண்டிகேட்டர்கள் அனைத்தும் எந்த எச்சரிக்கையும் தரவில்லை என்பதனையும் அவர் உறுதி செய்தார்.
இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று அவருக்கு தோன்றியதால் காரின் ஜன்னல்களை கூட திறக்காமல் அவர் தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
ஆயில் கசிகிறது என்று எச்சரிக்கை செய்த இளைஞர்கள் தனக்கு முன்னாலும் பின்னாலும் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து வருவதை கண்ட அவர், இதில் ஏதோ விஷமம் உள்ளது என்பதை உணரவே காரை சற்று வேகம் கூட்டியுள்ளார்.
இந்த சமயத்தில் அவர்களின் கேபின் முழுவதும் ஒரு வித காரமான நெடி மற்றும் கண் எரிச்சலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும் காரின் ஜன்னல்களை கூட திறக்காமல் வேகமாக சென்றுள்ளனர்.
பின்னர் எதிர்திசையில் ஒரு பெட்ரோல் பங்கு இருப்பதை கண்டு அங்கு அவர்கள் சென்றனர். அப்போது காரை விட்டு இறங்கி வந்த பார்த்த போது தான் ஒருவிதமான ரசாயன ஆயில் கலவையை காரின் முன்பகுதியில் ஊற்றப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
இது குறித்து பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் கூறிய போது தான் சில நாட்களுக்கு முன்னரும் இதே போன்று ஒருவருடைய காரின் மீது ஆயில் ஊற்றி அவரை கீழே இறங்கச் செய்து ஒரு கும்பல் அவர்களை அடித்து உதைத்து அவர்களிடம் இருப்பதை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?