Just In
- 13 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய போலீஸ் வாகனம்... இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?
டெல்லியில், அதிவேகமாக வந்த காவல்துறை வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் இ
நொய்டாவில் மோட்டார்சைக்கிள் மீது போலீஸ் வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். மோதிவிட்டு தப்பிய அந்த வாகனத்தை சிசிவிடி மூலமாக அடையாளம் கண்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நொய்டாவில் உள்ள 11வது செக்டாரில் இந்த சம்பவம் நடந்தது. அதிவேகமாக வந்த காவல்துறைக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா கார் முன்னால் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது.
இதில், மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டியவரும், பின்னால் அமர்ந்திருந்த சகோதரர்களான இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காவல்துறைக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா கார் ஒரு சில நொடிகளில் அங்கிருந்து தப்பிவிட்டது. அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இளைஞர்கள் இருவரும் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பயங்கர விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில், அந்த டொயோட்டா இன்னோவா கார் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
உண்மையில் இதுபோன்று விபத்தில் சிக்குபவர்களுக்கும் அல்லது அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கும்தான் அந்த இன்னோவா கார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் அவசர உதவிக்காக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் UP-100 என்ற அவசர உதவித் திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தின் கீழ் அவசர உதவி அல்லது விபத்தில் சிக்குவோருக்கு 15 நிமிடத்தில் உதவி கிடைப்பதற்காக காவல்துறைக்கு இன்னோவா கார்களை வழங்கி இருந்தனர். அந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார்தான் தற்போது விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், உதவிக்கு செல்ல வேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களே விபத்தை ஏற்படுத்திவிட்டு, இதுபோன்று பொறுப்பில்லாமல் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். இந்த நிலையில், காரை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுனர் மற்றும் காரில் இருந்த காவலர் ஆகியோரை சஸ்பென்ட் செய்ய நொய்டா காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் சிங் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபோன்று சாலை விபத்துக்களில் சிக்குவோரை காப்பாற்ற முனைவோருக்கு காவல்துறை சார்பில் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உளளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு செய்துள்ளனர்.
டெல்லி அரசாங்கம் ஒருபடி மேலே போய், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுபவர்களுக்கு ரூ.2,000 பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த பொறுப்பை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே இவ்வாறு செய்துள்ளனர். இந்தநிலையில், மோட்டார்சைக்கிளில் செல்வோர் சில விஷயங்களை மனதில் வைத்து செல்வது அவசியம்.
மோட்டார்சைக்கிளில் செல்லும்போது பேசிக்கொண்டே செல்வதை தவிர்க்கவும். சாலையில் முழுக்கவனத்தையும் செலுத்தவும். பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எளிதில் புலனாகும் உடைகளை அணிந்து செல்வது ஒரு உபாயம்.
கனரக வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களுக்கு வழிவிட்டு விடுங்கள். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க இது உதவும். இருசக்கர வாகனங்களுக்கான தடத்தில் பயணிக்கவும்.
அருகில் அல்லது பின்னால் வரும் வாகனங்களை கவனித்து செல்லவும். ரியர் வியூ மிரர்கள் மூலமாக அடிக்கடி பார்த்து ஓட்டவும். இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட் மற்றும் கவச உடைகளை எப்போதுமே அணிந்து செல்லுங்கள். அது உங்கள் உயிரை காக்கும் கவசமாக இருக்கும். அலட்சியம் காட்டாதீர்கள்.
{promotion-urls}
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!