Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குளுகுளு வசதியுடன் ஹம்சஃபர் சொகுசு ரயில் அறிமுகம்- சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
ரயில் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. அதிவேக ரயில்கள், சொகுசு ரயில்களையும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மிக துரித கதியில் நடந்து வருகிறது.
அந்த வகையில், நாட்டின் மிகவும் சொகுசு வசதிகள் கொண்ட புதிய ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் செய்து வைத்தார். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய சொகுசு ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மூன்றடுக்கு படுக்கை வசதியுடன் ரயில் பெட்டிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 22 ரயில் பெட்டிகளும், இரண்டு ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெளிர் நீல வண்ணத்தில் பூக்கள் வரையப்பட்டதாக வித்தியாசமான பெயிண்டிங் அலங்காரத்தை பெற்றிருக்கிறது.
இந்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதியின் மூலமாக ரயில் பயணிகளுக்கு தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வழங்கும் சாதனங்கள், பார்வையற்றோருக்கான பிரெய்லி முறை தகவல் பலகைகள் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இந்த ரயிலில் காஃபி, டீ வழங்கும் எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மொபைல்போன், லேப்டாப் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பாயிண்டுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.
மிக சொகுசான படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறமும் மிக தரமான பாகங்கள் மற்றும் அலங்கார பெயிண்ட்டிங்குடன் கவர்வதாக இருக்கிறது. தரையில் வினைல் ஃபுளோரிங் செய்யப்பட்டுள்ளது.
கழிவறைகள் மிகவும் உயர்தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இதில் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, கழிவுகள் தண்டவாளத்தில் கொட்டாது. மேலும், குப்பைத் தொட்டிகளும் உண்டு. இதனால், சுகாதாரமான பயண அனுபவத்தை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த ஹம்சாஃபர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் பெட்டியும் ரூ.2.6 கோடி விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோரக்பூரிலிருந்து துவங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். குளிர்சாதன வசதி கொண்ட சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட இந்த ஹம்சாஃபர் ரயிலில் கட்டணம் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!