Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை, பெங்களூரில் ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு வந்த ஏர்பஸ் ஹெலிகாப்டர்!
சென்னை மற்றும் பெங்களூரில் விசேஷ வசதிகளுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் இருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா துவங்கி வைத்தார்.
அமெரிக்காவை சேர்ந்த ஏர் மெடிக்கல் குரூப் மற்றும் ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை துவங்கியிருக்கிறது பெங்களூரை சேர்ந்த ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ நிறுவனம். இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ஏர்பஸ் ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
முதல்கட்டமாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஹெலிகாப்டர்களை ஏர்பஸ் நிறுவனம் கடந்த அக்டோபரில் டெலிவிரி வழங்கியது.
ஏர்பஸ் எச்130 என்ற ஹெலிகாப்டர் மாடல்தான் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சேவைக்காக விசேஷ அம்சங்களுடன், இந்த ஹெலிகாப்டரை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கிறது.
இந்த ஹெலிகாப்டர்களில் நோயாளிக்கான ஸ்ட்ரெச்சரும், மருத்துவ பணியாளர்கள் அல்லது நோயாளியின் உறவினர்கள் அமர்ந்து செல்வதற்கான மூன்று இருக்கைகள் உள்ளன. இரண்டு பைலட்டுகள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை இயக்குவர்.
இந்த ஹெலிகாப்டரில் அவசர சிகிச்சை மையத்தில் உள்ளது போன்று பல நவீன மருத்துவ உபகரணங்களும், சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை கூட எளிதாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.
அத்துடன், இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலத்துக்கான மீட்புப் பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர்களை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் மீட்புப் பணிகளுக்கு தேவையான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கும், அதிலுள்ள மீட்பு கருவிகளை இயக்குவதற்கும் பைலட்டுகளுக்கு ஏர்பஸ் நிறுவனமே நேரடியாக பயிற்சி அளித்துள்ளது.
மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சியை ஏர் மெடிக்கல் குழுமம் அளித்துள்ளது. இதன்மூலமாக, குறித்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவ வசதியை விரைவாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகளையும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விரைவாக எடுத்துச் செல்வதற்கான வசதியை இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை வழங்குகிறது. இந்த சேவையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஏர்பஸ் எச்130 ஹெலிகாப்டர்கள் உலக அளவில் பல சிறப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ சேவை, காவல் துறை ரோந்து பணி, உளவு பார்க்கும் பணிகளுக்காக விசேஷ கட்டமைப்புகளுடன் இவை தயாரித்து கொடுக்கப்படுகின்றன. மேலும், விஐபி.,களுக்கான முக்கிய போக்குவரத்து சாதனமாகவும், சுற்றுலாத் துறையிலும் இந்த ஹெலிகாப்டர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கண்ணாடி ஜன்னல்கள் மிக விசாலமானதாக இருப்பதால் சுற்றுலாத் துறையில் அதிக அளவில் இயக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் இருக்கும் டர்போமெகா ஏரியல் 2டி எஞ்சின் மிக சிறந்த செயல்திறன் மிக்கது என்பதுடன், சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் பெற்றது. இது சரிசமமான தரை தளத்தை பெற்றிருப்பதும், சிறந்த குளிர்சாதன வசதியை கொண்டிருப்பதும் மருத்துவ சேவைப் பணிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது.
இதுவரை 646 ஏர்பஸ் எச்130 ஹெலிகாப்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 50 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. சாதாரண மாடல்களில் ஒரு பைலட்டும், 6 முதல் 7 பயணிகளும் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்டது.
அதிகபட்சமாக மணிக்கு 237 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 617 கிமீ தூரம் வரை செல்லும் அல்லது 4 மணிநேரம் வரை பறக்கும். எனவே, அருகாமையில் உள்ள நகரங்களுக்கு விஐபி.,களை கொண்டு செல்வதற்கான பணிகளிலும் ஈடுபடுத்த முடியும்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!