Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கலாம்... !!
கடந்த ஜூன் மாதம் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது. இதையடுத்து, அதிக தூரம் சென்று இலக்கை தாக்கும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.
அண்டை நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் நவீன ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது இந்தியா. உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்துதான் அதிக அளவில் ஆயுதங்களையும், அதற்கான தொழில்நுட்பங்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவுடன் பல்வேறு புதிய ஆயுத ஒப்பந்தங்களை இந்தியா செய்திருக்கிறது. அதில், முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் ஒப்பந்தம்தான்.
பாகிஸ்தானால் பெரும் தொல்லையை அனுபவித்து வரும் இந்தியாவுக்கு இந்த புதிய பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மிக முக்கிய பாதுகாப்பை வழங்கும். அதாவது, பாகிஸ்தானின் எந்தவொரு மூலையையும் இந்த புதிய பிரம்மோஸ் க்ரூஸ் ரக ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்த முடியும்.
ரஷ்யாவுடன் இணைந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையானது, 290 கிமீ தொலைவுடைய இலக்குகளை மட்டுமே தாக்கும் திறன் கொண்டது. இதற்கு முக்கிய காரணம், ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில்[எம்டிசிஆர்] உறுப்பினர் அல்லாத நாட்டுக்கு 300 கிமீ தொலைவுக்கும் அதிகமாக செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இயலாத நிலை ரஷ்யாவுக்கு இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் எம்டிசிஆர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இணைந்துவிட்டது. இதன்மூலமாக, நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நீண்ட தூரம் செல்லும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்க ரஷ்யாவும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. இதன்மூலமாக, செகண்ட் ஸ்டிரைக் எனப்படும் திருப்பி தாக்கும் இந்தியாவின் வியூகத்திற்கு பெரும் வலு சேர்க்கும்.
தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணை 290 கிமீ தூரம் மட்டுமே செல்லும் திறன் கொண்டது. இதனால், பாகிஸ்தானின் உட்பகுதிகளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க இயலாத நிலை இருக்கிறது. ஆனால், புதிய பிரம்மோஸ் ஏவுகணையானது 600 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்ததாக மேம்படுத்தப்படுகிறது.
இதன்மூலமாக, இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் திறனை இந்தியா பெறும். இந்த புதிய பிரம்மோஸ் ஏவுகணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்போது, அது ஆளில்லா போர் விமானம் போன்றே கருத முடியும். போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, அதிலிருந்து இந்த ஏவுகணையை செலுத்தி எளிதாக தாக்குதல் நடத்தவும் முடியும்.
இந்த ஏவுகணையை விமானம் போலவே இலக்கை நோக்கி வளைந்து நெளிந்து சென்று தாக்கும் விதத்தில் கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேர் மற்றும் ரேடார் சாதனங்களை பெற்றிருக்கும். எந்த கோணத்திலும் தடைகளை கடந்து இலக்கை நோக்கி செல்லும். இதனால், போர் விமானங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும்.
தவிரவும், அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாம் அமைத்து சதிச் செயல்களுக்கு தயாராக இருந்த தீவிரவாதிகளின் முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் வியூகம் மூலமாக இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கியது.
ஆனால், புதிய பிரம்மோஸ் ஏவுகணை வரும்போது, இதுபோன்ற தீவிரவாதிகளின் முகாம்களை இந்த ஏவுகணையை வைத்தே தாக்க முடியும் என்று பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் அடர்ந்த வனங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை எல்லை தாண்டாமலையே தாக்க முடியும்.
எல்லை தாண்டி இலக்கை நோக்கி செல்லும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை எதிரி நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களால் கூட எளிதில் கண்டறிய முடியாது. எனவே, மிக மிக துல்லியமாக இலக்கை அழிக்கும் வல்லமை உண்டு.
மேக் 3.5 என்ற வேகத்தில் புதிய பிரம்மோஸ் ஏவுகணை செல்லும். பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. தூரத்தை அதிகரிப்பது மட்டுமே இப்போதைய பணி. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய பிரம்மோஸ் தயாராகிவிடும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கடற்படையில் ரகசியமாக சேர்க்கப்பட்ட புதிய ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி போர்க்கப்பல்!
- அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல் ஸும்வால்ட் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
- பிரம்மோஸ் ஏவுகணையை கண்டு சீனாவுக்கு உதறல் எடுத்ததற்கான காரணங்கள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!