Just In
- 12 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 59 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலகின் மிக உயரமான ரயில் பாலம்: காஷ்மீரில் கட்டப்படுகிறது!
உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் உள்ள சீனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்படுகிறது. இது ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். இயற்கை அமைப்பின் பல சவால்களை கடந்து காஷ்மீரில் ரயில் வழித்தடங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. பொறியியலுக்கு சவாலான மலைப் பகுதிகளை குடைந்து அங்கு ரயில் வழித்தடங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீர் மாநிலத்தின் கவ்ரி என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. சீனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் இந்த பாலம் உலகின் பொறியியல் அதிசயமாக மாற இருக்கிறது. தற்போது இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 2016ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயரம்
இந்த பாலம் 359 மீட்டர்(1,177 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் அமைப்பு ஆர்ச் போன்று அமைக்கப்படுகிறது.
சவால்கள்
கடந்த 2002ம் ஆண்டே இந்த பாலத்தை கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பாதுகாப்புப் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியின் 90 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம், நிலநடுக்கப் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் 2008ம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் இந்த பாலத்தை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
திட்ட மதிப்பீடு
இந்த ரயில் பாலத் திட்டத்தை கொங்கன் ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
முக்கிய வழித்தடம்
பாரமுல்லா- ஜம்முவை இணைக்கும் மிக முக்கிய வழித்தடமாக இது அமையும். சாலை மார்க்கமாக செல்லும் போது ஆகும் பயண நேரத்தை இந்த ரயில் வழித்தடம் பாதியாக குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கும்போது பாரமுல்லாவிலிருந்து ஜம்முவுக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
மூலப்பொருட்கள்
1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 25,000 டன் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட அளவு கட்டுமானப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் தருவிக்கப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தை தடுக்காமல் இந்த பாலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய உயரமான பாலம்
தற்போதைய உயரமான பாலமாக சீனாவின் குயிஷோ மாகாணத்தில் ஓடும் பெய்பான்ஜியாங் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இது 275 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.