Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரோல்ஸ்ராய்ஸ் அந்தஸ்தை ஆட்டிப் பார்த்த இந்திய மன்னர்!
அந்தஸ்தை கூட்டுவதற்காக ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவது இன்று நேற்றல்ல, தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது. ஆனால், உலக அளவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருப்பதை அகவுரமாக நினைக்க வைத்தார் ஓர் இந்திய மஹாராஜா.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை மண்டியிட வைத்த அந்த மஹாராஜாவின் செயல் இன்று வரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன வரலாற்றில் மாறாத வடுவாக இருந்து வருகிறது.
ஆல்வார் மன்னர்
ஆல்வார் மன்னரான ஜெய் சிங் ஒருமுறை லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார்.
அவமரியாதை
ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார்.
கோபம்
மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது மன்னருக்கு ஷோரூமில் இருந்தவர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தனர்.
6 கார்கள்
அப்போது, அந்த ஷோரூமில் நின்றிருந்த 6 கார்களையும் மன்னர் ஜெய்சிங் வாங்கியதுடன், முழுப் பணத்தையும் உடனடியாக செட்டில் செய்துவிட்டு வந்தார்.
குப்பை வண்டி
ஊருக்கு வந்தவுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். கார்கள் அரண்மனைக்கு வந்தவுடன் முதல் வேளையாக அனைத்து கார்களையும் குப்பை வண்டியாக்க உத்தரவிட்டார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் இந்த செய்தி ரோல்ஸ்ராய்ஸ் கார் உரிமையாளர்களுக்கு எட்டியது.
விற்பனை பெரும் சரிவு
ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கவுரத்திற்காக வாங்கியவர்கள் மத்தியில் இந்த செய்தி மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், குப்பை வண்டியாக பயன்படும் கார்களை தாங்கள் வைத்திருப்பதை அகவுரமாக வாடிக்கையாளர்கள் நினைக்கத் தோன்றினர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆர்டர் செய்திருந்த பலர் ஆர்டரை திரும்ப பெற்றனர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் விற்பனை படு மோசமடைந்ததால், வருவாயிலும் பெரும் இழப்பு ஏற்பட துவங்கியது.
மன்னிப்பு கடிதம்
நிலைமையை உணர்ந்து கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மன்னர் ஜெய்சிங்கிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டது. அத்துடன், ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு பாடம் கற்பிக்கவே இதுபோன்று செய்ததாகவும், அதனை ரோல்ஸ்ராய்ஸ் உணர்ந்து கொண்டதால், குப்பை வண்டியாக கார்களை பயன்படுத்த வேண்டாம் என்று பணியாளர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.
கார்கள் பரிசு
மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் குப்பை வண்டியாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பதிலாக 6 புதிய கார்களையும் பரிசாக வழங்கியது. இந்த நிகழ்வுக்கு பின்னர் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?