Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரம்!
மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அதிவேக ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரமாக இறங்கியிருப்பது தெரிந்ததே. உடனடி தீர்வாக, மணிக்கு 200 கிமீ வேகம் வரை ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அடுத்து, ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- ஆமதாபாத் இடையே மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
புல்லட் ரயிலைவிட வேகம்
இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் அடுத்த கட்ட முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. அதாவது, புல்லட் ரயிலைவிட வேகமாக செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்குவதற்கான முயற்சிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மாக்லேவ் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்துடன் இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
நவீன நுட்பம்
உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே மாக்லேவ் ரயில் தொழில்நுட்பம் உள்ளது. இவை புல்லட் ரயில்களைவிட வேகமாக செல்லும். அதாவது, மணிக்கு 500 கிமீ வேகம் வரை இந்த மாக்லேவ் ரயில்களை இயக்க முடியும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 600 கிமீ வேகத்தை தாண்டிச் சென்று மாக்லேவ் ரயில் சாதனை படைத்தது.
சக்கரங்கள் இருக்காது
மாக்லேவ் ரயில்கள் காந்தபுல விசையில் இயங்குபவை. அதாவது, இந்த ரயில்களில் சக்கரங்கள் இருக்காது. தண்டவாளத்தின் மீது செல்லாமல், தண்டவாளத்தின் மேல் சில மிமீ இடைவெளியில் மேலே காந்த விசையின் மூலமாக செல்லும்.
சொகுசான பயணம்
உராய்வு குறைவதால் அதிர்வுகள் இல்லாத சொகுசான அதேசமயத்தில் மிக விரைவான போக்குவரத்தை இவை வழங்கும். மேலும், புல்லட் ரயிலைவிட 25 சதவீதம் அளவுக்கு எரிபொருள் செலவு குறைவாக இருக்கும்.
தானியங்கி நுட்பம்
புல்லட் ரயில்களைவிட இவை 5 சதவீதம் அளவுக்கு குறைவான பராமரிப்பு செலவீனத்தையும், சுற்றுச்சூழலுக்கு சிறந்தவையாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாக்லேவ் ரயிலின் சிக்னல் சிஸ்டம் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும். எனவே, மிகவும் பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு செலவு
இந்த மாக்லேவ் ரயில் வழித்தடத்தை கட்டமைப்பதற்கான செலவும் மிக அதிகம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. புல்லட் ரயிலைவிட குறைவானதாக இருக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுப் பணிகள்
எனவே, இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து தருமாறு ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அமைப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.அடுத்த ஆறு மாதத்திற்குள் திட்ட வரையறையை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
பணிகள் தீவிரம்
இதனைத்தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் மத்திய ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விருப்ப அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
ட்விட்டரில் தகவல்
இந்த நிலையில், மாக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸுரிச் நகரை சேர்ந்த சுவிஸ்ரேபிட் ஏஜி ரயில் நிறுவனத்துடன் மாக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை பெல் நிறுவனம் நடத்தி வருகிறது.
கனவு நனவாகும்...
அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் மாக்லேவ் ரயில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் திட்டமிட்ட காலத்தில் மாக்லேவ் ரயிலை இந்தியாவில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!