Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மேனுவல் ட்ராகிங்கிற்கு குட்பை... வந்தாச்சு புதிய ரேடியோ சாதனம்; இந்திய இரயில்வேயில் அதிரடி அறிமுகம்
இந்தியாவில் இரயில்களை கண்காணிக்க இதுவரை பின்பற்றி வந்த முறை மாற்றப்பட்டு, ரேடியோ சாதனை முறையில் பின்பற்றப்படவுள்ளது. அதுகுறித்த தகவல்கள் இனி
2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேகன்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட எஞ்சின்களை கொண்டுள்ள ஒரு பிரம்மாண்ட நெட்வோர்க் தான் இந்திய இரயில்வே துறை.
உலகின் மிகப்பெரிய இரயில்வே துறையான இந்திய ரயில்வேயில் இரயில்கள் ஒவ்வொன்றையும் இதுவரை மேனுவலாகத்தான் ட்ராக் செய்யப்பட்டுகின்றன.
இந்த முறையை மாற்றி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ராக்கிங் அமைப்பை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் ரேடியோ அதிர்வெண்கள் (Radio-frequency identification (RFID) ).
ரேடியோ அதிர்வெண்கள் மூலம் இயங்ககூடிய RFID டேக் (Tag ), ரூ.1000 மதிப்புகொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த RFID டேக்கை இரயில் பெட்டிகள், எஞ்சின்கள், வேகன் ஆகியவ்வற்றில் பொறுத்தப்படும். ஒவ்வொறு டேகுக்கும் தனித்தனியாக குறீயிட்டு எண் தரப்படும்.
பிறகு இரயில் பாதைகளில் ரேடியோ அதிர்வெண்ணைக் கண்டறியும் ரீடர் அமைக்கப்படும். இந்த ரீடர் கணினியோடு இணைக்கப்பட்டுயிருக்கும்.
இரண்டு மீட்டர் தூரம் வரை செல்லகூடிய இரயில்களுக்காக தரப்பட்டுயிருக்கும் குறியீட்டு எண்ணை (ரேடியோ அதிர்வெண்) இந்த ரீடர் வாசித்து, அவை கணினிக்கு தகவல் கொடுக்கும்.
இதன்மூலம் ரயில் எங்கே இருக்கிறது? ஒரே வழிப்பாதைகளில் எத்தனை ரயில்கள் பயணிக்கின்றன என்பன போன்ற தகவல்களை கணினி வழியே அதற்கான அலுவலர்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.
ரயில்களில் தரப்படும் RFID டேக்கை 25 ஆண்டுகள் வரை இரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம். அதற்கு பிறகு கலாவதி ஆகிவிட்டால் புதிய டேக்கை பொருத்தி, புதிய குறியீட்டை எண்ணை வழங்கலாம்.
தற்போது இயக்கப்படும் ரயில்கள் மட்டுமில்லாமல், இனி புதியதாக தயாரிக்கப்பட்டும் இரயில்பெட்டிகள், எஞ்சின்கள் ஆகியவற்றிலும் RFID டேக்குகள் பொருத்தப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடைகளில் பொருட்களை வாங்கும் போது, அதன் பின்னர் பார்கோடு இருக்கும், அதை ஸ்கேன் செய்தால், அந்த பொருளை குறித்த அனைத்து தகவல்களும் பில் போடும் போது தெரியவரும்.
இரயில்களில் பொருத்தப்படும் ரேடியா அதிர் வெண்ணிற்கான செயல்பாடும் கிட்டத்தட்ட இதே தொழில்நுட்பம் முறை தான்.
ஆனால் பார்கோடு போலில்லாமல், இது இன்னும் மேம்படுத்தப்பட்ட வடிவில் இருக்கும். அதாவது பார்கோடில் ஏதாவது பழுது ஏற்பட்டால், ஸ்கேனரால் பொருட்களின் தகவலை பெறமுடியாது.
இரயில்களை கண்டுபிடிக்க உதவும் RFID டேக்குகள் இரயில் அதிர்வெண் தொழில்நுட்பத்தில் கண்டறியப்படுவதால் பார்கோடு போன்ற பிரச்சனைகள் இதில் ஏற்பட வாய்பில்லை.
ரீடர், குறியீட்டு எண்ணை தவிர, ஒவ்வொரு இரயில்களிலும் ரியாக்டர் சிப், சிக்னலை தெரிவிக்கும் ஆன்டனா இடம்பெற்றிருக்கும். எந்த வானிலை சூழலையும் தாங்கக்கூடிய வகையில் ஆன்டனாவின் மேற்பரப்பு மூடப்பட்டு இருக்கும்.
ரியாக்டர் சிப் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, அதில் ரயில் பாதைகளில் உள்ள ரீடரில் ரிசீவ் செய்யப்பட்டு, பிறகு கணினிக்கு அது தகவல் வழங்கும்.
சிப் மற்றும் ரீடருக்கான தகவல் பரிமாற்ற பணியை ஆன்டனா மேற்கொள்ளும்.
இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ரேடியோ மின்காந்த அலைகளால் இயங்குவதால் RFID டேக் இயங்க மின்சாரமோ, பேட்டரியோ அல்லது எரிவாயுவோ தேவையில்லை.
ஏற்கனவே ரேடியோ அதிர்வெண்கம் ( RFID) மூலம் இயங்கக்கூடிய முறை இந்தியாவில் தனியார் துறையில் இருந்து வருகிறது. ஊழியர்களின் வருகையை அறிந்துகொள்ள ஐ.டி கார்டுகளிலும், கீசெயின் மூலம் திறக்கப்படும் கார் கதவுகள் ஆகியவற்றிலும் RFID முறை இங்கு வழக்கத்தில் தான் உள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்களும், ஐ.டி போன்ற பெருநிறுவனங்களிலும் வழக்கத்திலிருந்த RFIDயை இந்திய அரசு இரயில்வே துறை மூலம் போக்குவரத்து செயல்பாடுகளுக்கு முதன்முறையாக இந்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
RFIDயின் பயன்பாடு இந்தியாவில் இந்த அளவில் இருக்குமானால். மேலை நாடுகளில் டிராஃபிக் சிக்னல், சுங்கச் சாவடிகளில் விதி மீறும் ஓட்டுநர்களை குறித்த தகவல்களை அறிய RFID பயன்படுத்தப்படுகிறது. இதுபோல பல நாடுகளில் இது வேவ்வேறு பயன்பாட்டிற்காக வழக்கத்தில் உள்ளது.
இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்தப்படவுள்ள RFID முறையால் இரயில்களின் இயக்கம், ஒரே பாதையில் இருக்கும் ரயில்களின் செயல்பாடுகள் மட்டுமே கண்காணிக்கப்படவுள்ளன.
இந்த திட்டம் இந்திய ரயில்வேதுறையில் பெரிய வரவேற்பையும், தேவையையும் அதிகரிக்குமானால் போக்குவரத்து சார்ந்த செயல்பாடுகளில் மேலைநாடுகளில் RFIDயை பயன்படுத்துவது போல இந்தியாவிலும் பயன்படுத்த அரசு முயற்சிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இதை செயல்படுத்துவதற்கு முன்னர், விசாக்கப்பட்டிணம்- தால்சர் வழித்தடத்தில் RFID டேக் தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக இந்திய ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!