Just In
- 16 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 27 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
லண்டன் டு டெல்லி... ஹயபுசாவில் ஓர் அசுர பயணத்திற்கு இளைஞர் ஆயத்தம்
லண்டனில் வசித்து வருபவர் இந்தியரான சுஷாந்த் ஓர் அசகாய பைக் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஆம், இங்கிலாந்திலிருந்து தனது ஹயபுசா பைக்கில் குறுகிய காலத்தில் மிக விரைவாக இந்தியாவை அடைவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
வரும் 25ந் தேதி தனது பைக் பயணத்தை இங்கிலாந்தில் துவங்கும் சுஷாந்த் அடுத்த 15 நாட்களில் இந்தியாவை அடைந்துவிட திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ், துருக்கி, ஈரான் வழியாக பைக்கில் பயணிக்க இருக்கும் அவர் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அடைய திட்டமிட்டுள்ளார்.
ஒருவேளை, பாகிஸ்தானில் நுழைவதற்கு உடனடியாக விசா வழங்கப்படாவிட்டால், துபாய் வழியாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால், துபாய் வழியாக வருவதற்கு கூடுதல் காலம் செலவழியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முடிந்தவரை குறுகிய நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்யவும் சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பாவில் சில நாடுகளில் பயணித்திருப்பதால், சாலை விதிகள் மற்றும் வேகக்கட்டுப்பாடுகள் குறித்து ஓரளவு தெரியும் என்பதால் தனது பயணத்தில் அதிக பிரச்னைகள் இருக்காது என்று கருதுகிறார்.
அடுத்த மாதம் 23ந் தேதி லண்டன் திரும்புவதற்கு சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால், தனது ஹயபுசா பைக்கை இங்கே விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார். மேலும், இந்த பைக்கை லண்டன் எடுத்துச் செல்வதற்கு முன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
சுஷாந்த் பயணம் சிறக்க எமது வாழ்த்துகள்!