Just In
- 10 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 42 min ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 5 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
Don't Miss!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தரையிலும், கடலிலும் தரையிறங்கும் போர் விமானத்தை வாங்கும் இந்தியா!
கடலிலும், தரையிலும் தரையிறங்கும் நவீன ரக போர் விமானத்தை ஜப்பானிடமிருந்து இந்தியா வாங்குகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிற நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்கு ஜப்பான் அரசு தடை விதித்திருந்தது. அந்த தடையை விலக்கிக் கொண்டு இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது.
அதன்படி, யுஎஸ்-2 என்ற நவீன ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்தப்போது இந்த போர் விமானத்தை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய போர் விமானம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
கூடுதல் விபரங்கள்
பல விசேஷ அம்சங்களை கொண்ட நவீன ரக யுஎஸ்-2 என்ற அந்த போர் விமானம் பற்றிய கூடுதல் சிறப்புத் தகவல்களையும், படங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.
தயாரிப்பு நிறுவனம்
ஜப்பானை சேர்ந்த சின்மேவா நிறுவனத்தின் தயாரிப்பான யுஎஸ்-2 என்ற நவீன ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஓடுபாதை தேவையில்லை
ஓடுதளம் இல்லாத பகுதியிலும் தரையிறங்கும் வசதி கொண்டது. மேலும், கடலிலும், தரையிலும் இந்த விமானத்தை தரையிறக்க முடியும்.
ரேஞ்ச்
இந்த போர் விமானத்தில் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 4,500 கிமீ வரை பயணிக்கும்.
எடை சுமக்கும் திறன்
இந்த விமானத்தில் 30 வரை பயணிக்க முடியும் என்பதோடு, 18 டன் எடையையும் எடுத்துச் செல்ல முடியும்.
மோசமான வானிலை
மோசமான வானிலையிலும் கூட தரையிறக்க முடியும். குறிப்பாக, கடல்காற்று 40 கிமீ வேகத்தில் வீசும்போதும் இதனை சுலபமாக தரையிறக்க முடியும்.
பயன்பாடு
அந்தமான், லட்சத்தீவுகள் பகுதியின் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இந்த விமானத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேட் இன் இந்தியா
பிரதமர் மோடியின் இந்தியா மேக் என்ற தாரக மந்திரம் போன்றே இந்த புதிய ரக விமானம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளையும் ஜப்பான் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
ஜப்பானுடன் போடப்பட்டிருக்கும் சமீபத்திய ராணுவ வர்த்தக ஒப்பந்தத்தின்படி, மேலும் 6 போர் விமானங்களையும், சில முக்கிய ராணுவ தளவாடங்களையும் இந்தியா வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Photo Credit:ShinMaywa
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?