Just In
- 9 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 30 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 56 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!
அக்னி-4 ஏவுகணையின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் வாய்ந்த அக்னி-5 மற்றும் அக்னி-4 ஏவுகணைகள் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது, இந்த இரு ஏவுகணைகளும் குடைச்சல் கொடுத்து வரும் அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்து அவ்வப்போது சில்மிஷம் காட்டி வரும் சீனாவிற்கு செக் வைக்கவே இந்த இரு ஏவுகணை சோதனைகளையும் நம் நாட்டு பாதுகாப்புத் துறை முக்கியமானதாக கருதி சோதனை செய்தது.
இந்த நிலையில், அக்னி-4 ஏவுகணை சோதனைகள் மூலமாக ஏவுகணை ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா மீறி வருவதாக சீன மீடியாக்கள் குற்றம் சாட்டியது. இந்த பிரச்னையை ஐ.நா.சபை அளவுக்கு செல்லும் பிரச்னையாக பூதாகரமாக சித்தரித்து வெளியிட்டதுடன், அக்னி-4 போன்ற ஏவுகணையை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தானையும் அவை தூண்டியிருக்கின்றன. இந்த நிலையில், அக்னி-4 ஏவுகணையை கண்டு சீனா அதிக அச்சமுறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அக்னி-4 ஏவுகணையின் சிறப்பை தொடர்ந்து காணலாம்.
அக்னி வரிசையில் அதிக தூரம் பாய்ந்து செல்லும் வல்லமை கொண்ட மாடல்கள்தான் அக்னி-4 மற்றும் அக்னி-5. இந்த இரு ஏவுகணைகளும் இந்தியாவிலிருந்து அதிக தூரத்தில் உள்ள சீனாவின் முக்கிய நகரங்களை கூட தாக்கும் திறன் வாய்ந்தவை. இதனால், அந்த நாடு இந்தியாவிடம் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அக்னி-5 ஏவுகணை 5,000 கிமீ தூரத்துக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது. அதேபோன்று, அக்னி-4 ஏவுகணையும் 4,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அச்சு பிசகாமல் குறி வைத்து தாக்கும். இதனால், சீனாவின் எந்தவொரு பகுதியையும் தாக்கும் வல்லமையை இந்தியா பெற்றிருக்கிறது. குறிப்பாக, அந்நாட்டு ராணுவ மையங்கள், வெடிமருந்து கிடங்குகளை இந்த ஏவுகணைகளை கொண்டு எளிதில் தாக்க முடியும்.
அக்னி-4 மற்றும் அக்னி-5 ஏவுகணைகளின் மிக முக்கிய சிறப்பம்சம். அணு ஆயுதங்களை வைத்து ஏவும் வசதியை கொண்டிருப்பதுதான். இதனால், அண்டை நாடுகள் சற்று இந்தியா மீது போர் தொடுப்பதற்கு ஒருமுறைக்கு பல முறை யோசிக்கும். இந்த ஏவுகணைகளை பிரயோகப்படுத்துவது என்பது நோக்கமல்ல என்றாலும், எதிரிகள் வாலாட்டுவதை குறைத்துக் கொள்வது நிச்சயம்.
அக்னி-4 ஏவுகணையானது 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. இந்த ஏவுகணை இரண்டடுக்கு திட எரிபொருள் கொண்ட கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன் முனைப்பகுதியில் வெடிப்பொருட்களை வைத்து ஏவ முடியும்.
இந்த ஏவுகணையில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் வழியில் ஏற்படும் இடையூறுகளுக்கு தக்கவாறு இலக்கை நோக்கிய பயணத்தை தானாகவே மாற்றிக்கொண்டு பயணிக்கும். இது மிக மிக நவீன தொழில்நுட்ப அம்சமாக கூற முடியும்.
இந்த ஏவுகணையில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் வழியில் ஏற்படும் இடையூறுகளுக்கு தக்கவாறு இலக்கை நோக்கிய பயணத்தை தானாகவே மாற்றிக்கொண்டு பயணிக்கும். இது மிக மிக நவீன தொழில்நுட்ப அம்சமாக கூற முடியும்.
இந்த ஏவுகணையை நம் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் வாகனத்தில் வைத்து ஏவ முடியும். எல்லைக்கு மிக அருகாமையில் கொண்டு சென்று ஏவுவதன் மூலமாக, எதிரி நாடுகளுக்குள் அதிக தூர இலக்குகளை குறிவைத்து ஏவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், எதிரிகள் எளிதில் கண்டறியாதவாறு, இடத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற ஏவுகணைகள் மிக மிக அதிவேகத்தில் பறக்கும்போது, உராய்வின் மூலமாக அதன் முன் முனைப்பகுதியில் 3,000 டிகிரி அளவுக்கு வெப்பம் உருவாகும். அந்த வெப்பத்திலிருந்து முன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் அணுவெடிப்பொருட்கள் இலக்கை தாக்கும் வரை எந்த சேதமும் ஏற்படாதவாறு தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணையை ஏவுவதற்காக 8*8 தத்ரா டெலர் ரெயில் மொபைல் வாகனம் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் எந்த நேரத்திலும் அக்னி-4 ஏவுகணையை பொருத்தி செலுத்த முடியும்.
அக்னி-4 ஏவுகணை வரை ராணுவ பயன்பாட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது. விரைவில் அக்னி-5 ஏவுகணை சேர்க்கப்பட உள்ளது. அடுத்ததாக, 8,000 முதல் 12,000 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்ல அக்னி-6 ஏவுகணை தயாரிப்பும் நடந்து வருகிறது.
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!