Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கான ரயில்களும், ரயில் வழித்தடங்களும்!
உலகிலேயே 4வது பெரிய ரயில் வழித்தட கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா. பரந்து விரிந்த நம் தேசத்தின் போக்குவரத்து நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வரும், ரயில் போக்குவரத்து எல்லை தாண்டியும் விரிவடைந்து வருகிறது.
தற்போது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பரிசீலனையில் உள்ள புதிய ரயில் வழித்தடங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
01. சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் - பாகிஸ்தான்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சாலை மார்க்கம் தவிர்த்து, ரயில் இணைப்பு வசதியும் உள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1976ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி இரு நாடுகளுக்கும் இடையல் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது. சம்ஜவுதான என்றால் ஒப்பந்தம் என்று பொருள். டெல்லியிலிருந்து அட்டாரி எல்லை வரையிலும், அங்கிருந்து லாகூர் வரையிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் நுழைந்ததும் பயணிகளிடம் குடியுரிமை சோதனை நடத்தப்படும். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரயில் பெட்டிகளும், எஞ்சின்களும் மாறி மாறி பயன்படுத்தப்படுகிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த சேவை பாதிக்கப்பட்டாலும், தொடர்ந்து ரயில் இயக்கப்படுவது ஆறுதல்.
02. மைத்ரி எக்ஸ்பிரஸ்
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இரு வழித்தடத்திலும் வாரத்திற்கு 6 முறை இயக்கப்படுகிறது.
03. நேபாளம்
இந்தியாவுக்கு மிக நெருக்கமான எல்லையை கொண்டிருக்கும் நேபாள நாட்டிற்கு 2005ம் ஆண்டு முதல் பீகாரிலுள்ள ரக்ஸல் நகரிலிருந்து, அதன் அருகில் அமைந்திருக்கும் நேபாளத்திலுள்ள பீர்கன்ச் பகுதிக்கு ரயில் வழித்தடம் செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, மேலும் 5 ரயில்வே வழித்தடங்களை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில், 2 வழித்தடங்களுக்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
04. பூட்டான்
பூட்டான் நாட்டிற்கு ரயில் இணைப்பை வசதியை ஏற்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. நேரு பொன்விழா இணைப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், ஹசிமாராவிலிருந்து பூட்டானிலுள்ள தோரிபாரி என்ற இடத்திற்கு இடையில் 18 கிமீ தூரத்திற்கு இந்த ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களால் தாமதப்பட்டு வருகிறது.
05. மியான்மர்
இந்தியாவிலிருந்து மியான்மர் நாட்டிற்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில் வழித்தடமாக மாறும்.
06. வியட்நாம்
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள மணிப்பூரிலிருந்து வியட்நாம் நாட்டிற்கு ரயில் சேவை துவங்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அமையும்.
07. சீனா
டெல்லியிலிருந்து சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அதிவேக ரயிலை இயக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இது வர்த்தக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் பெறும் ரயில் வழித்தடமாக மாறும்.
08. தாய்லாந்து
ஏற்கனவே தாய்லாந்துக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அடுத்து ரயில் பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது. இது வர்த்தகமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தடமாக மாறும்.
மலேசியா
மலேசியாவிற்கும் இந்தியாவிலிருந்து ரயில் விடுவதற்கான வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர்
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பர்மா நாட்டு உதவியுடன் ரயில் மூலம் இணைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலமாக, அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு சிறப்பான போக்குவரத்தாக அமையும் என்பதோடு, சுற்றுலா வளர்ச்சியும் மேம்படும்.
நீண்ட தூரம் பயணிக்கும் உலகின் டாப் 10 ரயில்கள்!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!