Just In
- 19 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எருமை மாடு மீது மோதி உருக்குலைந்த ஜாகுவார் கார்!
கர்நாடக மாநிலத்தில் அதிவேகத்தில் சென்ற ஜாகுவார் கார் எருமை மாடு மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.
குடிபோதை, விதிமீறல் என விபத்துகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நம் நாட்டில் நடைபெறும் விபத்துகளுக்கு சாலையின் குறுக்கே வரும் விலங்குகள் மீது வாகனங்கள் மோதுவதும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
இதற்கு உதாரணமாக, சமீபத்தில் கர்நாடகாவில் நடந்துள்ள விபத்து கார் ஓட்டுனர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. அதிவேகத்தில் சென்ற ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ஒன்று சாலையின் குறுக்கே வந்த எருமை மாட்டின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
எருமை மாட்டின் மீது மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து பல்டியடித்துள்ளது. இதில், கார் மிக மோசமாக உருக்குலைந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயங்களுடன் தப்பி இருப்பதாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கிய எருமை மாடும் படுகாயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கர்நாடக மாநிலம் சிவமோகா அருகில் உள்ள அயனூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து முழுமையானத் தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
Accident Images Source: Team BHP
இந்த நிலையில், சிறந்த கட்டுமானம், அதிக பாதுகாப்பு வசதிகள் இருந்தும் ஜாகுவார் கார் மிக மோசமான விபத்தை சந்தித்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில எளிய உபாயங்களை மனதில் வைத்து கார் ஓட்டுவது சாலச் சிறந்தது.
கார் விபத்துக்களுக்கு அடிப்படையில் வேகம்தான் முக்கிய காரணம். சாலை நிலைக்கு தக்கவாறு வேகத்தை நிர்ணயித்து செல்ல வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற விலங்குகள் நடமாட்டம் இருப்பது சகஜம்.
எனவே, இதுபோன்ற சாலைகளில் மிக கவனமாக செல்ல வேண்டும். தூரத்தில் விலங்குகளை பார்த்தால் உடனடியாக வேகத்தை குறைத்துவிடுவது அவசியம். அது எந்த பக்கம் செல்லும் என்பது தெரியாது. அத்துடன், கடந்து சென்றுவிடலாம் என்ற கணித்துக் கொண்டு அசட்டையுடன் கார் ஓட்டுவது இதுபோன்று ஆபத்தை விளைவித்துவிடும்.
குறிப்பாக, இரவு நேரங்களில் விலங்குகள் நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுடைய சாலைகளில் செல்லும்போது அதிக கவனம் தேவை. அத்துடன், இதுபோன்ற சாலைகளை இரவு நேரங்களில் தவிர்ப்பதும் அவசியம்.
ரூ.70 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த ஜாகுவார் காரில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. இருந்தும், அதிவேகத்தில் சென்றதால், ஓட்டுனருக்கு காரை கடுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விபத்தில் சிக்கி இருக்கிறது.
எனவே, சீரான வேகத்தை கடைபிடித்து ஓட்டுவதே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும். வேகத்தைவிட விவேகம் முக்கியம் என்பதை மனதில் வைத்து கார் ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணமும் சிறப்பானதாக அமையும்.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!