Just In
- 1 hr ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 3 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 5 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 5 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
மேட் இன் இந்தியா எஃப்16எஸ் போர் விமானம் தயாரிக்க டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனம்
‘மேட் இன் இந்தியா’ போர் விமானம் தயாரிக்க டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த அமெரிக்க நிறுவனம்..!!
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் எஃப்16எஸ் ரக போர் விமானம் தற்போது 'மேட் இன் இந்தியா' முத்திரையுடன் தயாரிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்கும் தனது கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அதிக ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இதன்படி பாரீஸ் நகரில் நடந்த விமானக் கண்காட்சியில் எஃப்16எஸ் போர் விமானங்கள் தயாரித்து அளிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துக்கு இந்தியா ஒப்பந்தம் வழங்கியது.
இந்திய விமானப்படைக்காக 70 எஃப்16எஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வழங்க லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கு இந்தியா ஒப்பந்தம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘லாக்ஹீட் மார்டின்' நிறுவனம், ஏரோஸ்பேஸ், மிலிட்டரி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒரு உலகத்தரமான நிறுவனம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய டிஃபன்ஸ் காண்ட்ராக்ட் நிறுவனமாகவும் லாக்ஹீட் மார்டின் விளங்கி வருகிறது.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதே கோட்பாடு ஆகும்.
எனவே உள்ளூர் நிறுவனமான டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸுடு சிஸ்டம்ஸ் லிட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே எஃப்16எஸ் போர் விமானங்களை தயாரிக்க உள்ளது லாக்ஹீட் மார்டின் நிறுவனம்.
டாடா குழுமத்திற்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக டெக்ஸாஸில் உள்ள லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எஃப்16எஸ் போர் விமான தயாரிப்பு பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கெனவே இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் வானூர்தி உதிரிபாகங்களை ( குறிப்பாக சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் எஸ்-92 ஹெலிகாப்டர் )ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் பிரபல போர் விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் செயல்படவுள்ளதால், இத்துறையில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, இந்தியாவில் இருந்து எஃப்16எஸ் போர் விமானங்கள் ஏற்றுமதி செய்யப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.