Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
75 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த தபால் சேவைக்கான சுரங்க ரயில்வே; நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும்
லண்டனில் புகழ்பெற்ற தபால் சுரங்க ரயில்வே மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.
லண்டனில் புகழ்பெற்ற சுரங்க தபால் இரயில் சேவை 14 வருடங்கள் கழித்து வரும் ஜூலை மாதம் 28ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.
லண்டனில் 1920களில் நிலவிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பேடிங்டன் முதல் கிங்ஸ் கிராஸ் வரையில், சுமார் 10.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1927ம் ஆண்டில் மெயில் இரயில் என்ற பெயரில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டது.
பேடிங்டன் முதல் கிங்ஸ் கிராஸ் வரையில் இருக்கக்கூடிய அனைத்து தபால் அலுவலகங்களுக்கும், தினமும் 4 மில்லியன் கடிதங்கள் வரை மெயில் ரயில் சுமந்து சென்று விநியோகிக்கும்.
தினமும் 22 மணி நேரங்களாக பயன்பாட்டில் இருந்த இந்த இரயில் சேவை, அதிக செலவு வைப்பதாக கூறி இங்கிலாந்தில் தபால் சேவை நிறுவனமான ராயல் மெயில் 2003ல் நிறுத்திவிட்டது.
தற்போது தி போஸ்டல் மியூசியம் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ள மெயில் ரயில் 2017ல் திறக்கப்படும் என அந்நிறுவனம் கடந்தாண்டில் அறிவித்தது.
இங்கிலாந்தின் தபால் துறை வரலாற்றை பிரதிபலிக்கும் அருங்காட்சியக வடிவில் இதனுடைய பயன்பாடு இருக்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
மேலும் தி போஸ்டல் மியூசியம் நிறுவனம் மெயில் ரயிலை மக்கள் பார்வையிடுவதற்கும் மற்றும் அந்த சுரங்க வழித்தடங்களை சுற்றி பார்க்கவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும் இந்த சுரங்க தபால் ரயில்வே குறித்த வரலாற்றை ஒலி மற்றும் ஒளி வடிவில் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெயில் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்த போது, சுமார் 200 பொறியாளர்கள் மற்றும் பல துப்புறவு பணியாளர்கள் இதற்கான இயக்கபணிகளில் வேலை பார்த்தனர்.
தற்போது 14 வருடங்களுக்கு பிறகு இந்த ரயில் சேவை திறக்கப்பட உள்ளது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மணி நேர வேலை, ஓய்விற்கு நேரமே இல்லாத தருணங்கள் என இதில் பணியாற்றிய பலர் தங்களது அனுபவங்களை நினைவு கூறுவது லண்டன் ஊடகங்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
மே, 2003ம் ஆண்டு மூடப்பட்ட இந்த மெயில் ரயில் மற்றும் அதன் வழிப்பாதையை தற்போது வரை ஒரு பொறியாளர் உட்பட 2 பேர் கொண்ட குழு தினமும் பராமரித்து வருகின்றனர்.
ஜூலை 28ம் தேதி திறக்கப்படும் சுரங்க தபால் இரயிலை பொது மக்கள் பார்வையிட அவர்கள் இந்திய மதிப்பில் ரூ. 650/- செலுத்த வேண்டும்.
மேலும் ரயிலில் பயணிக்க சூடுதலாக இந்திய மதிப்பில் ரூ. 360 செலுத்த வேண்டும் என தற்போது மெயில் ரயிலை பராமரித்து வரும் தி போஸ்டல் மியூசியம் என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!