Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாலை பாதுகாப்பில் இந்தியாவிலேயே சிறந்த நகரம் எது தெரியுமா?
சாலைப்பாதுகாப்பில் சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது மாருதி சுசுகி நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்திய நகரங்களில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான 'மாருதிசுசுகி இந்தியா' தற்போது இந்திய நகரங்களின் சாலைப் பாதுகப்பு பற்றிய ஆய்வுத் தகவல்களையும் தரவரிசையையும் வெளியிட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் சாலை பாதுகாப்பு குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சியுடன் இணைந்து மாருதி நிறுவனம் ஆய்வு நடத்தியது.
மாருதி நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் சாலை வசதிகள், அவற்றின் பராமரிப்பு, தரம், ஒளி வசதி, தூய்மை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு போன்ற அம்சங்கள் அடிப்படையிலும், மற்றும் சாலையை பயன்படுத்தும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இந்த அம்சங்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் சாலைப் பாதுகாப்பில் இந்திய நகரங்கள் வகிக்கும் நிலை குறித்த குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு நகரங்களின் சாலைப் பாதுகாப்பு பட்டியலை வெளியிட்டார்.
முடிவுகள்
- இதன்படி நாட்டிலேயே சாலைப்போக்குவரத்தில் சிறந்த நகரமாகவும், முதல் இடத்தையும் பெங்களூரு நகரம் பிடித்துள்ளது.
- குஜராத்தின் அகமதாபாத் நகர் தூய்மை அடிப்படையில் முதல் இடம் வகிக்கிறது.
- சாலைகளில் அவசர கால உதவி கிடைப்பதில் நம் சென்னை முதல் இடம் பெற்றுள்ளது.
- உள்கட்டமைப்பு, சாலையின் தரம் மற்றும் பரவலான சாலை வசதிகளில் தலைநகர் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது.
- இதே போல மாற்றுத்திறனாளிகள், பாதசாரிகளுக்கான உரிமை, மோட்டார் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அடிப்படையில் மும்பை நாட்டில் முதல் இடம் பிடித்துள்ள நகராக உள்ளது.
- புகை மாசு கட்டுப்பாட்டில் மகராஷ்டிராவில் உள்ள புனே நகர் சிறந்து விளங்குகிறது. இங்கு கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலைகளில் சிறந்த ஒளிவசதி மற்றும் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் மற்ற நகரங்களை கொல்கத்தா முந்துகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த ஆய்வு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கல்சி பேசுகையில், "சாலைப் பாதுகாப்பு நாட்டின் அதிமுக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. சாலைப்பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்துகள், உயிரிழப்புகள் நொடிக்கு நொடி ஏற்பட்டு வருகின்றன"
"ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியாக உள்ள மாருதி நிறுவனம் இப்பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்துள்ளது, ஓட்டுநர் பயிற்சியின் ஒரு அங்கமாக பாதுகாப்பான வாகன இயக்கும் முறைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்" என்றார்.
இதன் ஒரு அங்கமாகவே தற்போது இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைப் பாதுகாப்பில் நகரங்களின் நிலையும், தொய்வாக உள்ள அம்சங்களை அடையாளம் காணவும் நகர நிர்வாகத்தினருக்கு இது உதவும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசு அமைப்புகள், தன்னார்வு அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலைப் பாதுகாப்பை உயர்த்தும் முயற்சியில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த அறிக்கை வெளிட்டதன் நோக்கமாக உள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!