Just In
- 59 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்து மர்மத்தில் புதிய ட்விஸ்ட்!
டயானா கார் விபத்து மர்மம் குறித்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா மரணமடைந்தார். டயானாவின் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டயானாவின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டன. புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்ததால், காரை அதிவேகத்தில் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக காரணம் கூறப்பட்டது.
கணவர் சார்லசை விட்டுவிட்டு, புதிய காதலரான டோடி பயதுடன் சுற்றுவது பிடிக்காமல், இங்கிலாந்து அரச குடும்பம் சதி செய்து கொன்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.
இந்த நிலையில், டயானா கார் விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸ் நகரை சேர்ந்த புகைப்பட நிபுணர் ரோஸ்டெயின் என்பவர் ரேடியோவுக்கு ஒன்று அளித்த பேட்டியில் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, டயானா மற்றும் அவரது காதலர் டோடி பயது பயணித்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்280 கார் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற காராக இருந்தது என்று கூறி இருக்கிறார்.
டயானா பயணித்த கார் அவரது காதலர் டோடி பயதின் தந்தை முகம்மது பயதுக்கு சொந்தமான ரிட்ஸ் ஓட்டலில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகம்மது பயது வாங்கிய அந்த பென்ஸ் காரானது, சிறைக்கைதி ஒருவனால் திருடிச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியிருக்கிறது.
அந்த விபத்தில், கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. அதனை ஒரு மெக்கானிக் வாங்கி சரிசெய்து முகம்மதுவிடம் விற்பனை செய்துள்ளார்.
இந்த நிலையில், முகம்மது பயது ஓட்டலில் பணிபுரிந்த ஓட்டுனர் கரீம் என்பவர் புகைப்பட நிபுணர் ரோஸ்டெயினின் நண்பர். அவர் டயானா பயணித்த காரை ஒருமுறை ஓட்டிப் பார்த்துவிட்டு, அது மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த கார் டயானா மற்றும் டோடி பயது பயணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த காரை மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் ஓட்டினால் நிச்சயம் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிந்துள்ளது. இந்த நிலையில்தான் அந்த காரை டயானா மற்றும் டோடி பயது பயணித்துள்ளனர்.
அதனை ஓட்டிய ஓட்டுனர் புகைப்பட பத்திரிக்கையாளர்கள் பின்தொடர்வதை கண்டுகொண்டு அதிவேகத்தில் செலுத்தி இருக்கிறார். மணிக்கு 120 கிமீ வேகத்தில் அந்த கார் பயணித்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதை தூணில் மோதி விபத்தில் சிக்கியிருக்கிறது. பயன்படுத்த லாயக்கு இல்லாத காரை டயானா பயணிக்க வழங்கியது குறித்து இப்போது புதிய சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
Picture Credit: Daily Mail
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா