Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரு மணி நேரத்தில் 400 கி.மீ: புல்லட் இரயில் தொழில்நுட்பத்தில் சீனாவின் அடுத்த இலக்கு
2020ல் அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை உருவாக்கும் பணிகளில் சீனா இறங்கியுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இனி
இந்தியர்களாகிய நாம் இன்னும் புல்லட் இரயிலையே பார்த்ததில்லை, ஆனால் சீனா அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில் தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது.
ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு புல்லட் இரயில்களை தயாரிக்க சீனா திட்டமிட்டு வருகிறது.
இதற்கான அனைத்து வேலைகளும் 2020ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு அதே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என புல்லட் இரயில்களை தயாரிக்கும் சி.ஆர்.சி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சி.ஆர்.சி.சி நிறுவனம் புதிய புல்லட் இரயில்களை கார்பன் ஃவைபர் மற்றும் அலுமினியம் அலாய்களை கொண்டு தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.
இதனால் தற்போது பயன்பாட்டிலிருக்கும் புல்லட் இரயில்களை விட, புதிய இரயில்கள் எடையில் குறைவாகவும், ஆற்றலில் அதிகமாகவும் இருக்கும் என சி.ஆர்.சிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் தலைமை பொறியாளர் க்கியா ஃபெங், இரயில்களுக்கான பொருட்கள் அனைத்திலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பிறகே தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சீனாவில் பயன்பாட்டில் உள்ள புல்லட் இரயில்கள் அனைத்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.
ஆனால் சி.ஆர்.சி.சி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய ரக புல்லட் இரயில்கள் ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.
இந்த கூடுதல் திறனால் பயணிகளின் நேரம் விரயம் குறையும் என்கிறது சி.ஆர்.சி.சி. மேலும், சாலை மற்றும் அதை சார்ந்து நடக்கும் அனைத்து வர்த்தகத்தையும் இதன்மூலம் ஒரே முறையில் கொண்டுவரவும் சி.ஆர்.சி.சி திட்டமிட்டு வருகிறது.
2020ம் ஆண்டிற்குள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டால், சீனா இந்த போக்குவரத்து பயன்பாட்டை வைத்து மற்ற நாடுகளுடன் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த கைகோர்க்கும்.
சீனாவின் இந்த போக்குவரத்து சாதனத்தை மற்ற நாடுகளும் பயன்படுத்தும் பட்சத்தில், புதிய வேலை வாய்ப்புகள், வியாபார கட்டமைப்புகள் உருவாகும்.
அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தூரம் என்பது சுருங்கும்.
இதன்மூலம் அதிக தூரம் பயணிக்கும் ஊர்திகளை நம்பியிருக்காமல், இதுபோன்ற அதிவேக போக்குவரத்து சாதனங்கள் தனிநபர் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுடன், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ரயில்சேவையை உருவாக சி.ஆர்.சி.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் அந்நாடுகளின் போக்குவரத்து தரத்தை உயர்த்தவும், தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த நாடாக அதை அமைக்கவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் முன், அதற்கான சோதனைகளை மிக கடினமான முறையில் நடத்தவுள்ளது சீனா.
இதற்காக பெய்ஜிங் முதல் ஷெஹ்யாங் வரை அடுத்த தலைமுறைக்கான இரயில்வே டிராக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்று, 2019ம் ஆண்டில் அடுத்த தலைமுறைக்கான சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் புல்லட் இரயில்கள் சோதனையில் ஈடுபடுத்தப்படும்.
ஒரு மணிநேரத்தில் 400 கிலோ மீட்டரை கடக்க வல்ல இரயில்களை உருவாக்கும் சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றியடையுமா என்ற விவாதங்களும் தற்போது முளைத்துள்ளன.
இது குறித்து சீனாவின் முக்கிய பொறியாளர்களில் ஒருவரான லியூ யோமை, தற்போதைய பொருளாதாரம் புதிய தொழில்நுட்பத்திலான புல்லட் ரயில்களை கட்டமைப்பதில் பலன் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது நடைமுறைக்கு வந்தால் புல்லட் இரயில்கள் ஓட பயன்தரும் பொருட்கள் எல்லாம் எளிதில் தேய்மானம் அடையும் என்றும், அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் அடிக்கடி மாற்றும் சூழ்நிலை உருவாகும் எனவும் லியூ யோமை கூறுகிறார்.
பொறியாளர் லியூ யோமையின் சந்தேகங்களை குறித்து பல தெளிவான பதிலை சி.ஆர்.சி.சியின் தலைமை பொறியாளர் க்கியா ஃபெங் முன்வைக்கிறார்.
உபகரணங்களின் தேய்மானம் என்பது அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில் தொழில்நுட்பத்தில் நடைபெற சாத்தியமே இல்லை என்கிறார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் புல்லட் இரயில்கள் வெளிவந்த பொழுது இதே கருத்து தான் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை கடந்த புல்லட் இரயில் போக்குவரத்து வெற்றிக்கண்டதாக க்கியா ஃபெங் கூறியுள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் புல்லட் இரயில்களுக்கான இரும்புகளை தாய்கூர்ன் ஐயர்ன் என்ற பிரபலமான நிறுவனம் தான் வழங்கவுள்ளது.
தற்போது சீனாவில் இயங்கும் அனைத்து புல்லட் இரயில்களில் கட்டுமானத்திலும் இந்நிறுவனத்தின் இரும்பு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இரும்புகளின் தரம் உலகளவில் அறிந்தது. அதனால் பல பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல தேய்மானம் என்பது இத்தொழில்நுட்பத்தில் சாத்தியமே இல்லை என்பது சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் எண்ணமாக உள்ளது.
அதி வேக அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆசியாவில் மிகப்பெரிய நாடாக சீனாவால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் சாத்தியக் கூறுகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அண்டை நாடுகளுக்கு இந்த சேவையை உருவாக்கி தருவதன் மூலம், பல அரசியல் காரணங்களையும், தேவைகளையும் உருவாக்கி ஆசியாவில் வல்லரசாக நீடிப்பதே சீனாவின் எண்ணமாக இருக்கிறது.
இந்தியாவில் புல்லட் இரயில்கள் கட்டமைப்பது குறித்த அறிவிப்பு வெறும் அறிவிப்புகளாகவே இருக்கிறது. இன்று பொருளாதாரத்தில் உலகில் 2ம் நிலை நாடாக உள்ள சீனா, முதன்முதலாக புல்லட் இரயில் சேவையை உருவாக்கிய போது பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
இந்தியாவிலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து பயன்பாடு அது சாந்த துறைகளில் நிச்சயம் வளர்ச்சி தேவை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து சாதனங்கள் இந்தியாவிற்குள்ளும் நுழைந்தால் அது நிச்சியம் மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு நிச்சயம் உயர்வை தரும்.
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!