Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் விரைவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு
மொபைல் செயலி மூலம் அழைத்தால் உடனே வரக்கூடிய ஓலா கால்டாக்ஸி நிறுவனம், விரைவில் மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸி கார்களை நாட்டில் அறிமுகப்படுத்துகிறது.
ஓலா கால் டாக்ஸி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் கார் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தாண்டில் சிறியளவில் அதற்கான தொழில்நுட்பம் பெற்ற கார்களை நாட்டின் சில பகுதிகளில் கொண்டுவரவும் அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
இந்தியப் போக்குவரத்து துறையில் ஓலாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஓலாவின் இந்த அபார வளர்ச்சி மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களின் பேருந்து கட்டணங்களை குறைக்கும் அளவிற்கு சென்று விட்டது.
இந்தியாவில் ஓலா கால் டாக்ஸி சேவைக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்த அந்நிறுவனம், தற்போது மின்சாரத்தில் மூலம் இயங்கும் கார் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. இதனை சோதனை முயற்சியாக செய்து பார்க்க இந்தியாவின் சில முக்கிய நகரங்களையும் ஓலா தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய சந்தையில் கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கு நிலை உள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ளவே ஓலா தற்போது மின்சாரத்தால் இயங்கும் கார் சேவையை வழங்கவுள்ளது.
மின்சார பயன்பாடு கொண்ட வாகனங்கள் இந்தியாவில் வளர்ச்சியடையும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதில் தற்போது பயணிக்கவேண்டுமானால் சந்தை நிலவரத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல வழிமுறைகளை திட்டமிடவேண்டும். அதைத் தான் தற்போது ஓலா நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
பெட்ரோலிற்கான விலையை விட, மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கான பராமரிப்பு செலவு சிறிது அதிகம் தான். மேலும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் குறைவே. இதனால் தான் தற்போது பெரும்பாலான மக்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள்.
மேலும், பெட்ரோலிற்கு ஆகும் செலவை விட மின்சார கார்களுக்கான பேட்டரிகளின் பராமரிப்பும் அதிகம் தான். ரீசார்ஜ் செய்யவும், அதற்கு ஏற்றார் போன்ற வசதிகளை அமைத்துக்கொள்ளவும் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் கவலை.
அதுவும் பேட்டரிக்கான செலவு மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் வரவேற்பு பெறும் பட்சத்தில் பேட்டரிக்கான விலையும் மலிவாகும் என்பது ஓலாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவில் மின்சார பயன்பாட்டில் இயங்கும் வாகனங்களுக்கான சூழ்நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் சில பகுதிகள், ஆந்திர பிரதேசம் மற்றும் நாக்ப்பூர் என இந்தியாவில் சில மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடுகளை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்சார வாகன பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலை அனைத்து மாநிலங்களில் வரும் காலங்களில் நிச்சயம் உருவாக வாய்புள்ளது என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கணிப்பு.
மின்சார வாகனங்களுக்கான சந்தையை ஓலா கால்டாக்ஸி நிறுவனம் உருவாக்கினால், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் சேர்த்தே உருவாக்கும். இதனால் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் தேசியளவில் 22,000 எண்ணிக்கையிலான மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்