Just In
- 5 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தங்கம் விலை போல இனி பெட்ரோல், டீசல் விலையிலும் தினசரி மாற்றம்..!
பெட்ரோல், டீசல் விலையை வரும் மே 1 முதல் தினசரி மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு. அது குறித்த தகவல்களை காணலாம்.
வரும் மே 1 -ஆம் தேதி புதுச்சேரி உட்பட 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முடிவை அறிவித்துள்ளன. இதன்படி பாண்டிச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கப்பட உள்ளது.
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் 95% பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகிறது.
இதன்படி வரும் மே 1 முதல் பாண்டிச்சேரி, ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணம், ராஜஸ்தானில் உள்ள உதைப்பூர், ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெத்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் ஆகிய நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் அமலாகவுள்ள இந்த 5 நகரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமாக 200-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளதாக தெரியவருகிறது.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்தவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சர்வதேச விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றம் செய்யும் போது அது பெட்ரோலிய நிறுவனங்களுக்கும், மக்களுக்கு சுமையாக இருப்பதால் இத்திட்டம் வரவேற்கத்தக்கது என வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் போகப் போகத்தான் இதன் நிறை, குறை தெரியவரும்.
இதேபோல, தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் நிறுவனங்களும் இதே முறையை விரைவில் பின்பற்றக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காததை கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு வரும், மே 14-ம் தேதிக்கு பிறகு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மே மாதம் 15-ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை) இயக்குவோம்," என்றும் இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது நினைவுகொள்ளத்தக்கது.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!