Just In
- 3 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 4 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 5 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- 7 hrs ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சீனாவிற்கு இந்தியா ’செக்’: எல்லையில் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை எழுப்பிய இந்தியா- காரணம் என்ன?
9.15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சீனாவில் எல்லைக்கு அருகில் இந்தியா, நாட்டின் நீளமான ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது. வரும் 26ம் தேதி இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
ஆறுகளுக்கு மீதாக கட்டப்படும் பாலங்களில் இந்தியா, நாட்டின் மிக நீளமான பாலத்தை அசாம் மாநிலத்தில் கட்டமைத்துள்ளது.
9.15கிலோ மீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆற்றுப்பாலம் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியின் மேல் அமைந்திருக்கும் இந்த பாலம் அசாமின் தோலா மற்றும் சத்தியா என்ற இரு பகுதிகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த பாலத்தை நேரடியாக சென்று 26ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மும்பையின் பாந்தரா முதல் வோர்லி வரையில் 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாலம் தான் இந்தியாவின் மிக நீளம் கொண்டதாக இருந்து வந்தது.
விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் தோலா-சத்தியா பாலம் இனி இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெயர் பெறவுள்ளது.
சீனா மற்றும் இந்தியாவின் எல்லை பங்கீட்டு பிரச்சனைகளால் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேசம் எப்போதும் பதற்றம் நிறைந்த மாநிலமாக உள்ளது.
இதனால் எப்போதும் இந்தியா அம்மாநில எல்லைப்புறத்தை இராணுவம் கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் அவசர நிலை எழலாம் என்ற சூழல் இப்பகுதிகளில் உருவாகியுள்ளதால், இதற்காகவே இந்தியா பிரம்மபுத்திர நதியின் மீது தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது.
சீனாவின் நெருக்கடியை சமாளிக்க எளிதான ஒரு போக்குவரத்து வசதியாக இந்த ஆற்றுப்பாலம் இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான பணிகள் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டின் தொடக்கத்தில் தான் நிறைவுப்பெற்றன.
60 டன் எடைக்கொண்ட இராணுவ டாங்குகளை தாங்கும் அளவிற்கான திறனுடன் சுமார் ரூ.950 கோடி செலவில் இந்தியா தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது
அசாம் மாநிலத்தின் தலைநகரமான திஸ்பூர்லிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அதேபோல அருணாச்சால பிரதேசத்தின் தலைநகரான இத்தாநகருக்கும் இதற்கும் 300 கிலோ மீட்டர் தூரம்.
மேலும் சீனாவின் எல்லையிலிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இராணுவ பயன்பாட்டை காரணமாக காட்டி தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு இருந்தாலும். பொதுமக்கள் போக்குவரத்திற்கு இது பெரியளவில் பயன்படும்.
அசாம் முதல் அருணாச்சால பிரதேசத்திற்கு செல்லும் பல மணிநேரமாகும் பயணம் இனி 4 மணி நேரமாக குறையும்.
2015ம் ஆண்டே மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட வேண்டிய இந்த பாலம், மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்ததன் காரணமாக கட்டமைப்புகளால் தாமதமாகி தற்போது நிறைவுப்பெற்றுள்ளது.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையின் முக்கிய பணியாக இருந்த தோலா-சத்திய ஆற்றுப்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது அசாம் மற்றும் அருணாச்சல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியளவில் சாலைப் பணிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி சார்ந்த பணிகளில் தொடர்ந்து மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?
-
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
-
மிக மிக காஸ்ட்லியான காரை வாங்கிய யுட்யூபர்! சீக்கிரமே வேலைய விட்டுட்டு யுட்யூப் சேனல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்