Just In
- 2 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 3 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 5 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 10 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- News நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சீனாவிற்கு இந்தியா ’செக்’: எல்லையில் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை எழுப்பிய இந்தியா- காரணம் என்ன?
9.15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சீனாவில் எல்லைக்கு அருகில் இந்தியா, நாட்டின் நீளமான ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது. வரும் 26ம் தேதி இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
ஆறுகளுக்கு மீதாக கட்டப்படும் பாலங்களில் இந்தியா, நாட்டின் மிக நீளமான பாலத்தை அசாம் மாநிலத்தில் கட்டமைத்துள்ளது.
9.15கிலோ மீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆற்றுப்பாலம் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியின் மேல் அமைந்திருக்கும் இந்த பாலம் அசாமின் தோலா மற்றும் சத்தியா என்ற இரு பகுதிகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த பாலத்தை நேரடியாக சென்று 26ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மும்பையின் பாந்தரா முதல் வோர்லி வரையில் 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாலம் தான் இந்தியாவின் மிக நீளம் கொண்டதாக இருந்து வந்தது.
விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் தோலா-சத்தியா பாலம் இனி இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெயர் பெறவுள்ளது.
சீனா மற்றும் இந்தியாவின் எல்லை பங்கீட்டு பிரச்சனைகளால் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேசம் எப்போதும் பதற்றம் நிறைந்த மாநிலமாக உள்ளது.
இதனால் எப்போதும் இந்தியா அம்மாநில எல்லைப்புறத்தை இராணுவம் கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் அவசர நிலை எழலாம் என்ற சூழல் இப்பகுதிகளில் உருவாகியுள்ளதால், இதற்காகவே இந்தியா பிரம்மபுத்திர நதியின் மீது தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது.
சீனாவின் நெருக்கடியை சமாளிக்க எளிதான ஒரு போக்குவரத்து வசதியாக இந்த ஆற்றுப்பாலம் இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான பணிகள் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டின் தொடக்கத்தில் தான் நிறைவுப்பெற்றன.
60 டன் எடைக்கொண்ட இராணுவ டாங்குகளை தாங்கும் அளவிற்கான திறனுடன் சுமார் ரூ.950 கோடி செலவில் இந்தியா தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது
அசாம் மாநிலத்தின் தலைநகரமான திஸ்பூர்லிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அதேபோல அருணாச்சால பிரதேசத்தின் தலைநகரான இத்தாநகருக்கும் இதற்கும் 300 கிலோ மீட்டர் தூரம்.
மேலும் சீனாவின் எல்லையிலிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இராணுவ பயன்பாட்டை காரணமாக காட்டி தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு இருந்தாலும். பொதுமக்கள் போக்குவரத்திற்கு இது பெரியளவில் பயன்படும்.
அசாம் முதல் அருணாச்சால பிரதேசத்திற்கு செல்லும் பல மணிநேரமாகும் பயணம் இனி 4 மணி நேரமாக குறையும்.
2015ம் ஆண்டே மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட வேண்டிய இந்த பாலம், மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்ததன் காரணமாக கட்டமைப்புகளால் தாமதமாகி தற்போது நிறைவுப்பெற்றுள்ளது.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையின் முக்கிய பணியாக இருந்த தோலா-சத்திய ஆற்றுப்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது அசாம் மற்றும் அருணாச்சல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியளவில் சாலைப் பணிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி சார்ந்த பணிகளில் தொடர்ந்து மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..