Just In
- 36 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்ற போது மலையேற்றத்திற்காக பயன்படுத்தியது இந்த வாகனத்தை தான்..!
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு போலரிஸ் ஆஃப் ரோடு வாகனத்தை பயண்படுத்தியுள்ளார். அது குறித்து விரிவான தகவல்களை காணலாம்.
பிரதமர் மோடி தனது சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு போலரிஸ் ஆஃப் ரோடிங் வாகனத்தை பயண்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் இந்தியாவில் பிரத்யேகமான ஆஃப்ரோடு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இவை மலை முகடுகள், காடுகள், பாலைவனப் பரப்பு என கடின நிலப்பரப்புகளிலும் மிக அனாயசமாக கடப்பதால் ஆஃப் ரோடிங் வாகனப் பிரியர்கள் மத்தியில் போலரிஸ் வாகனங்களுக்கு நல்ல வரவேற்று இருந்து வருகிறது.
இந்நிலையில் இமயமலைத்தொடரில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ் பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி சுவாமி தரிசனத்திற்காக செல்ல தீர்மானித்தார்.
குளிர்காலத்தை முன்னிட்டு, கேதார்நாத் சிவன் கோவில் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
குளிர்கால விடுமுறை முடிவடைந்ததை அடுத்து, கடந்த புதன்கிழமை அன்று கேதார்நாத் சிவன் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. முதல் பூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல தீர்மானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயில் இமயமலை தொடரில் அமைந்துள்ளது. பாண்டவர்களால் கட்டப்பட்டு, ஆதிசங்கரரால் இக் கோயில் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
தனி ஹெலிகாப்டரில் உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் ஆகியோருடன் சென்ற பிரதமர், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலி பேடில் தரையிறங்கினார்.
அங்கிருந்து பிரதமரும், உடன் சென்றவர்களும் போலரில் ஆஃப் ரோடிங் வாகனத்தில் கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இக்கோயிலில் கடந்த 1989-ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வழிபாடு நடத்தினார். 28 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் ஒருவர் கேதார்நாத் கோயிலுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
3584 மீட்டர்கள் உயரம் கொண்ட கேதார்நாத் கோவிலை அடைய உள்ள மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது.
பெரும்பாலும் இந்த பாதையை கடக்க குதிரைகளே பயன்படுத்தப்படும், ஆனால் தற்போது சிறந்த ஆஃப் ரோடிங் வாகனமான போலரிஸ் பயன்படுத்தப்படுகிறது.
பிரதமர் பயன்படுத்தியது போலரிஸ் ரேஞ்சர் 6*6 800 ஈஎஃப்ஐ என்ற வாகனமாகும். இவை 4 வேரியண்டுகளில் கிடைக்கிறது.
போலரிஸ் ரேஞ்சர் 6*6 வாகனமானது 907 கிலோ சுமையை இழுத்துச்செல்லும் அளவுக்கு வலிமை பெற்றதாகும்.
இந்த வாகனத்தின் பின்பக்க கார்கோ பகுதியினால் 567 கிலோ எடையை சுமக்க முடியும்.
வலிமைமிக்க இந்த போலரிஸ் ரேஞ்சர் 6*6 வாகனத்தில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 800சிசி உள்ளது. இது அதிகபட்சமாக 40 பிஹச்பி ஆற்றலை வழங்கவல்லது.
இதில் 6 வீல்கள் உள்ளன. இந்த போலரிஸ் ரேஞ்சர் வாகனம் 6 வீல் டிரைவ் கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30.4 செண்டி மீட்டர் ஆக உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது.
இதன் காரணமாக வெள்ள பாதிப்புகளில் இருந்து சீர் செய்வதற்காக கேதார்நாத் கோவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.