Just In
- 35 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 49 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 57 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொச்சி மெட்ரோவிற்கு கொடியசைத்து விட்டு, பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..??
கேரள மாநிலத்தின் முதல் மெட்ரோ சேவையை கொச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களை தொடர்ந்து இந்தியாவின் 8வது மெட்ரோ சேவை கேரளாவின் கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கேரளாவின் முதல் மெட்ரோ சேவையாக பயன்பாட்டிற்கு வந்துள்ள இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்பு, அவர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஆளுநர் பி. சதாசிவம் ஆகியோரோடு பாலவிவட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து பத்தடிப்பாலம் மெட்ரோ நிலையம் வரை பயணம் மேற்கொண்டார்.
மெட்ரோ பயன்பாட்டை தொடங்கி வைத்த பிறகு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில்தனது உரையை தொடங்கிய மோடி, மலையாள மொழியில் பேசத் தொடங்கினார்.
கொச்சி நகரத்தின் ஒட்டுமொத்த பொது போக்குவரத்தையும் ஒற்றை முறையில் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார்.
மேலும் கொச்சி மெட்ரோ ரயிலின் பெட்டிகள் அனைத்தும் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
சுமார் ரூ.5180 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கொச்சி மெட்ரோ இரயிலை குறித்து 10 முக்கிய தகவல்கள்:
1.) அலுவா முதல் பாலவிவட்டம் இடையே 13 கி.மீ. தொலைவில் கொச்சி மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
2.) மேலும் இதில் 22 கி.மீ தொலைவில் 11 நிலையங்களுக்கான பணி நடைபெற்று வருகிறது.
3.) தற்போது முடிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் சுமார் ரூ.6000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
4.) கொச்சி மெட்ரோவின் இந்த முதல் தளத்திற்கான வழித்தடம் மூன்று ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டது.
5.) ஒவ்வொரு மெட்ரோ நிலையங்களும், கேரளாவின் தனிப்பட்ட கலாச்சாரங்களை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மல்டி மாடல் போக்குவரத்து முறையை வழங்கும் நோக்கம் கொண்ட 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தின் ஒரு பகுதியாக கொச்சி மெட்ரோ அமைந்துள்ளது.
7.) மாற்றுத்தினாளிகளுக்கு என தனிப்பட்ட பெட்டிகள், அவர்களின் பயன்பாட்டிற்காக வீல் சேர், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை வசதிகள் போன்றவை உள்ளன.
8.) மகளிர் மேம்பாட்டை கருதி கேரளா அரசு மேற்கொண்டு வரும் 'குடும்பஸ்திரி' என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கொச்சி மெட்ரோவிற்கான பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
9.) வாடிக்கையாளர்களின் சேவையில் இருந்து, மெட்ரோ நிலையங்களை சுத்தம் செய்வது, உணவுகளை வழங்குவது உட்பட பல்வேறு பிரிவுகளில் கொச்சி மெட்ரோவில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
10.) இதே குடும்பஸ்த்ரீ அமைப்புடன், மாநிலத்தின் மாற்று பாலின கொள்கையின் அடிப்படையில் பல திருநங்கைகளும் கொச்சி மெட்ரோவில் பணியில் உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மெட்ரோ சேவைகள் இருந்தாலும், நிலையங்களை வடிவமைத்த விதத்திலும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பணியிடங்களில் முன்னுரிமை அளித்த விதத்திலும் கொச்சி மெட்ரோ தனித்துவமான நிறுவனமாக உள்ளது.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!