Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெறும் ரூ.1,499 விலையில் குயிக்கர்ஸ்கேனர்... காருக்கான ஸ்மார்ட் சாதனம்!
இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உச்சகாலம். ஆட்டோமொபைல் துறையிலும் தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை கண்டு வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், கார்களுக்கான புதிய சாதனம் ஒன்றை குயிக்கர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குயிக்கர்ஸ்கேனர் என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தின் பயன்பாடுகளை எழுத எழுத கை கடுக்க வைக்கிறது. ஆம், கைக்கு எட்டும் விலையில், இந்த சாதனத்தின் மூலமாக கார் உரிமையாளர்கள் பெறக்கூடிய வசதிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
குயிக்கர்ஸ்கேனர் எனப்படும் இந்த கையடக்க சாதனம் பெறக்கூடிய தகவல்களை, மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக எந்த இடத்திலிருந்தும் பெறலாம். அதாவது, இது பன்முக பயன்களை தரும் கையடக்க சாதனமாக இருக்கிறது.
இந்த சாதனத்தின் மூலமாக கார் எங்கு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை கூகுள் மேப்பின் அடிப்படையில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். எனவே, தனி ஜிபிஎஸ் டிராக்கர் கருவி தேவையில்லை.
காரை வேறு வாகனத்தின் மூலமாக டோ செய்து எடுத்துச் சென்றாலும், வேறு சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்ய முயன்றாலும் இந்த சாதனம் மொபைல்போன் மூலமாக உரிமையாளரை எச்சரிக்கை செய்யும்.
அடுத்து எஞ்சின் இயக்கம் குறித்த தகவல்களை இந்த கருவி துல்லியமாக தருகிறதாம். இப்போது வரும் எல்லா கார்களிலுமே சராசரி மைலேஜ், தற்போது கிடைக்கும் மைலேஜ், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்ற தகவல்களை பெற முடியும். ஆனால், இந்த கருவி மூலமாக துல்லியமான கூடுதல் தகவல்களை பெற முடியும்.
அதன்படி, ஒரு டிரிப்பின்போது கார் எவ்வளவு நேரம் ஐட்லிங்கில் நின்றிருக்கிறது. ஒவ்வொரு டிரிப்பின் சராசரி மைலேஜ் எவ்வளவு, எத்தனை அதிவேகத்தில் இயக்கி இருக்கிறீர்கள், எத்தனை முறை காரை வேகமாக ஆக்சிலரேட்டர் கொடுத்து இயக்கினீர்கள். எத்தனை முறை சடன் பிரேக் போட்டீர்கள் என உங்கள் டிரைவிங் முறையையும் புட்டு புட்டு வைக்கும்.
இதன்மூலமாக, உங்களது டிரைவிங் முறையை மேம்படுத்தி, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஒரு மாதத்தில் உங்கள் கார் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது, அதன் சராசரி மைலேஜ், சராசரி வேகம் போன்ற எண்ணிலடங்கா தகவல்களையும், வசதிகளையும் இந்த சாதனம் தரும்.
இதுதவிர, எஞ்சின் இயக்கம், எஞ்சினில் ஏற்படும் பிரச்னைகள், பேட்டரியின் செயல்திறன், கூலண்ட்டின் வெப்பநிலை, மாசு உமிழ்வு அளவு உள்ளிட்ட பல தகவல்களையும், எச்சரிக்கையையும் உங்கள் கையிலிருக்கும் மொபைல்போனிற்கு தந்துவிடும்.
இந்த சாதனம் தனிநபர் மற்றும் ஸ்கூல் வேன், டாக்சி உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். இதன்மூலமாக, வாகனங்களின் பயணத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். காரை இரவல் கொடுத்தாலும் அல்லது உங்களது குழந்தையின் பள்ளி வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமானாலும், இதனை வைத்து தெரிந்துகொண்டு சற்று ஆசுவாசமாக இருக்கலாம்.
டிரைவர் போட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இது சாதகமான சாதனம். டிரைவர் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என்ற தகவல்களை மிக எளிதாக உட்கார்ந்த இடத்தில் உங்களது மொபைல்போன் மூலமாக தெரிந்துகொண்டு விடலாம்.
இந்த சாதனத்தை உங்கள் காரின் OBD II போர்ட்டில் பொருத்திவிட வேண்டும். பெரும்பாலான கார்களில் டேஷ்போர்டின் கீழ் பகுதியில் இந்த போர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த சாதனத்திற்கு மொபைல்போன் சிம் கார்டு ஒன்றும் தேவைப்படும்.
இன்டர்நெட் வசதி ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டு மூலமாக, சாதனத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் குயிக்கர் நிறுவனத்தின் சர்வர் கம்ப்யூட்டரில் பதிவாகும். இந்த சாதனத்திலேயே ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. கார் உரிமையாளர் விரும்பும் நேரத்தில் இந்த தகவல்களை மொபைல்போன் மூலமாக எந்த நேரத்திலும் பெற முடியும்.
ஒருங்கிணைந்த வசதிகளை தரும் இந்த பன்முக பயன்பாட்டு சாதனத்திற்கு விலையாக ரூ.1,499 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
- நொடியில் கார் இன்ஸ்யூரன்ஸ்... சட்டுனு க்ளிக் பண்ணுங்க !!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?