Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!
பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், வாகனங்களில் வெளிச்சந்தையில் மலிவு விலை ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதும், மாற்றங்கள் செய்வதும் பேஸனாகிவிட்டது. வெளிச் சந்தையில் ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இதற்கு உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் வருவது போல சைலென்சர் பொருத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை மஹாராஷ்டிர போலீசார் பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம், ஜல்கவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் தனஞ்செய் பாட்டீல். இவர் தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் ஒன்றை வாங்கி பொருத்தியிருந்தார்.
இந்த சைலென்சரின் சப்தம் மிக அதிகமாக இருந்ததுடன், அவ்வப்போது வேட்டு வெடிப்பது போன்றும் சப்தம் வந்துள்ளது. இதுகுறித்து ஜல்கான் மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த மோட்டார்சைக்கிளை பிடித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மோட்டார்சைக்கிளின் சைலென்சர் சப்தம் மிக அலாதியாக இருந்ததுடன், வேட்டு வெடிப்பது போல சப்தம் அச்சுறுத்துவதை போலவும், மிக அதிக சப்தமாகவும் இருந்தது.
மேலும், அந்த சப்தம் இடையிடையே துப்பாக்கியால் சுடும்போது வரும் சப்தம் போல கேட்டது. இதையடுத்து, இது பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பெருத்த அச்சத்தை ஏற்படுத்துவதாக கருதி, அந்த மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சட்டப்பிரிவு 119[2] மற்றும் 190[2] ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சைலென்சரை மாற்றிவிடுவதாக தனஞ்செய் பாட்டீல் உறுதி கொடுத்ததையடுத்து, ரூ.1,000 அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளை விடுவித்தனர்.
ஆனால் அவரது நண்பருடன் கையில் ஒரிஜினல் சைலென்சரை வைத்துக் கொண்டு அதே துப்பாக்கி சப்தம் தரும் சைலென்சருடன் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார் தனஞ்செய்.
அவரின் உறுதிமொழியின் பேரில் வண்டி விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தனஞ்செய் அந்த பகுதியின் உள்ளூர் அரசியல்வாதியின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.
வெளிச்சந்தையில் கிடைக்கும் மலிவு விலை ஆக்சஸெரீகளை பொருத்துவது வண்டியின் வாரண்டியை பாதிக்கும். அத்துடன், தேவையில்லாத பிரச்னைகளையும் வாகனத்தில் ஏற்படுத்தும். இது சட்டரீதியிலும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைக்கவும்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!