Just In
- 22 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹம்மர் கார் பரிசு கொடுத்து ஸ்பாட் ஃபிக்ஸிங்? - ஸ்ரீசாந்த் 'திடுக்' வாக்குமூலம்!
முன்னணி வீரர்களுக்கு ஹம்மர் காரை சூதாட்டத் தரகர்கள் பரிசாக கொடுத்துள்ளதாக போலீசாரிடம் ஸ்ரீசாந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டப் புகார் தொடர்பாக ஸ்ரீசாந்த்திடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது லேப்டாப், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களையும் போலீசார் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத் தரகர்கள் ஹம்மர் கார், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்துள்ளதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், மதுவிருந்து, அழகிககள் சப்ளை செய்தும் முன்னணி வீரர்களை சூதாட்டத் தரகர்கள் தங்களது வலையில் வீழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையா?
இந்திய கிரிக்கெட் அணியில் ஹம்மர் காரை கேப்டன் டோணியும், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங்கும் வைத்துள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீசாந்த் கூறியிருக்கும் புகாரால் பரபரப்பு கூடியிருக்கிறது.
ஸ்ரீசாந்த் தந்தை புகார்
ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டவுடன், கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் மீது ஸ்ரீசாந்த் தந்தை பரபரப்பு புகாரை தெரிவித்தார். தனது மகனை இருவரும் சேர்ந்து ஒழித்துக் கட்ட பார்ப்பதாக கூறிய அவர், பின்னர் அதனை வாபஸ் பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
விலையுயர்ந்த பரிசுகள்
ஹம்மர் கார் மட்டுமின்றி பல விலையுயர்ந்த கார்களையும், கைக்கடிகாரங்களையும் முன்னணி வீரர்களுக்கு சூதாட்டத் தரகர்கள் பரிசாக வழங்கியுள்ளதாகவும், அவர்களின் பெயரையும் ஸ்ரீசாந்த் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் தீவிரம்
ஸ்ரீசாந்த் கூறியிருக்கும் புகார்கள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். மேலும், ஸ்ரீசாந்தின் புகார்கள் குறித்து உடனடியாக உறுதிப்படுத்த இயலாது என்றும் டெல்லி போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலம் கேள்விக்குறி
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோன்று, இந்த விவகாரம் ஒரு சில வீரர்களோடு நின்று விடாது என்று தெரிகிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!