Just In
- 39 min ago குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- 1 hr ago இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
- 3 hrs ago திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- 4 hrs ago 73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
Don't Miss!
- News வீங்கிப்போன கால்கள்.. மிகவும் களைப்படைந்த முகம்.. திருமாவளவனை பார்த்து கலங்கும் விசிகவினர்
- Movies சிம்புவின் 50ஆவது படம்.. தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே
- Lifestyle கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
பி.எம்.டபுள்யூ தொழிற்சாலையில் போதையில் மயங்கி விழுந்த பணியாளர்கள்
பணியாளர்கள் போதை உட்கொண்டு மயங்கி விழுந்ததால், பி.எம்.டபுள்யூ நிறுவனம் 65 கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளது.
ஆடம்பர கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையில், இரண்டு ஊழியர்கள் பணியின்போது போதை மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்ததால், 1 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.6.5 கோடி.
ஜெர்மனியின் மூனிச் நகரத்தில் பி.எம்.டபுள்யூவிற்கான கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் புதிதாக தயாரிக்கும் கார்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் புகைப்போக்கி குழாய் பொருத்தும் இடத்தில், இரண்டு ஊழியர்கள் பணியின் போதே போதை மருந்தை உட்கொண்டுள்ளனர்.
போதை தலைக்கு ஏறியதால், பணியாளர்கள் அந்த இடத்திலே மயங்கி விழ, உடனடியாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பி.எம்.டபுள்யூ தொழிற்சாலையில் 40 நிமிடங்கள் பணிகள் பாதிக்கப்பட்டன. போதையால் மயங்கி விழுந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட அந்த இரண்டு ஊழியர்களும், அதிக போதை தரும் வஸ்துகளை உட்கொண்டுள்ளதாகவும், மேலும் மதுபானங்களை குடித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊழியர்களின் நடத்தயால் மிகுந்த கோபம் கொண்ட பி.எம்.டபுள்யூ நிறுவனம், இருவரில் ஒருவரை வேலை விட்டு டிஸ்மிஸ் செய்துள்ளது. மற்றொருவரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.
பி.எம்.டபுள்யூ வரலாற்றிலேயே முதன்முதலாக நடந்துள்ள இதுபோன்ற சம்பவத்தால், அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ஊழியர்களில் அலட்சியப்போக்கால், பி.எம்.டபுள்யூ 3 சிரீஸ், வேகன்ஸ் மற்றும் எம்.4 கார்களின் உற்பத்தியும் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
ஆர்டர்கள் குவிந்து கிடக்கும் தருணத்தில், குறிபிட்ட நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாமல் போனால், பி.எம்.டபுள்யூ மேலும் பல மில்லியனை இழக்க நேரிடும்.
அதனால் ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பத்தை குறித்து பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் பெரிய தலைகள் அதீத ஆலோசனை செய்து வருகின்றனர்.
பி.எம்.டபுள்யூ நிறுவனத்திற்கு ஏற்பட்ட இந்த வருமான இழப்பை அறிந்த நெட்டிசன்கள், போதை பணியாளர்களை கலாய்த்தும், பி.எம்.டபுள்யூ மேல் பாவம் கொண்டு மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.