Just In
- 45 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 54 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2 விமானிகளுடன் சீன எல்லை அருகே காணாமல் போன போர் விமானம்; பதற்றத்தில் இந்தியா!
சீன எல்லை அருகே சுகோய்-30 விமானம் காணாமல் போனாதால். இந்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் மாயமானது தொடர்பாக, அது சீனாவிற்கு சொந்தமான ஏதேனும் மலைப்பகுதிகளில் மோதி வெடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அசாம் மாநிலம் தேஸ்பூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் நேற்று காலை திடீரென மாயமானது.
சுகோய்-30 விமானம் காணாமல் போன போது, அதில் இரண்டு விமானிகள் வழக்கம் போல பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென ரேடார் சிக்னலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனது.
அசாமின் சாலோனிபாரி விமான தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 போர் விமானம், தரையில் இருந்து மேல் எழும்பிய 30-வது நிமிடத்தில் ரேடார் சிக்னலில் இருந்து திடீரென மாயமானது.
பதற்றமடைந்த கண்காணிப்பாளர்கள், விமானத்தை பல மணிநேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிகளை தொடர்பு கொண்டாலும், அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
சுமார் 12 பில்லியன் செலவில் சுகோய்-30 ரகத்தை சார்ந்த மொத்தம் 240 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கிஸ் என்ற உரிமத்தின் கீழ் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது
சுகோய்-30 விமானத்தில் ட்வின்-எஞ்சின் உள்ளது. அனைத்து பருவநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் தாக்குப்பிடித்து நிற்கும் திறன் கொண்டது.
முற்றிலும் இந்தியாவிற்கான சிற்பம்சம் மற்றும் அமைப்புகளுடன் சுகோய்-30 ஜெட் விமானங்களை ரஷ்யா தயாரித்தது.
மேலும் இதற்கான உதிர்பாகங்களை ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளிலிருந்து வாங்கி பொருத்தியது.
2010ம் ஆண்டில் சுகோய்-30 ரக விமானங்களை, பிரம்போஸ் ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடிய திறனுடன் தயாரிக்க ரஷ்யாவிற்கு இந்தியா ஆர்டர் கொடுத்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய சுகோய்-30 விமானங்கள் டர்போ-ஃபேன் எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து இந்த விமானங்கள் இந்திய இராணுவத்தால் மேம்படுத்தப்பட்டு வந்தன.
சுகோய் விமான இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது முதலே பல கோளாறுகளை சந்தித்து தான் வருகின்றன. குறிப்பாக இதுவரை எந்த விமானமும் போரில் சிக்கி சேதமடைந்தது கிடையாது. அனைத்தும் விபத்தின் போது சேதமடைந்தவை தான்.
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 70 முறை சுகோய் விமானங்கள் விபத்துகளை சந்தித்துள்ளன. இதற்கு காரணம் எஞ்சின் கோளாறு தான் என்று சொல்லப்படுகிறது. இந்த ரக விமானங்களை சரிசெய்ய நம்மிடம் உரிய வசதிகள் இல்லை என்பதே இதுபோன்ற விபத்துகள் நடக்க முக்கிய காரணம்.
போர் விமானங்களை சரியாக பராமரிப்பதற்காகவே இந்திய அரசு ரஷ்யாவிடம் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் உதிரி பாகங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலும் தீரும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய இந்த ஒப்பந்தம் மூலமாவது இந்திய விமானப் படையின் நிலைமை மாறுபடும் என்பதை எதிர்பார்க்கலாம்.
சீன எல்லை அருகே சுகோய்-30 போர் விமானம் மாயமாகி உள்ளதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சுகோய் விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 ரக விமானம் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுகோய் 30 ரக விமானம் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!