Just In
- 13 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!
மாருதி ஆல்ட்டோ காருடன் இரண்டு சூப்பர் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளின் அலட்சியம், சாலை விதிமீறல்கள், அதிவேகம் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதனால், உயிரிழப்புகளும் தொடர்ந்து அபாயகரமான எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் நடந்த பயங்கர சாலை விபத்து ஒன்று இதற்கு சான்றாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நகரில் நடந்த இந்த விபத்தில் மாருதி ஆல்ட்டோ 800 காருடன் அதிவேகமாக வந்த இரண்டு சூப்பர் பைக்குகள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாருதி ஆல்ட்டோ 800 கார் ஒன்று யூ-டர்ன் போட எத்தனித்தபோது, எதிர்திசையில் ஒன்றன் பின் ஒன்றாக சீறி வந்த கவாஸாகி வெர்சிஸ் 650 சூப்பர் பைக்கும், ட்ரையம்ஃப் டேடோனா 675 பைக்கும் கார் மீது அடுத்தடுத்து மோதின.
இந்த விபத்தில் கவாஸாகி வெர்சிஸ் 650 சூப்பர் பைக்கை ஓட்டி வந்தவர், ட்ரையம்ஃப் டேடோனா 675 பைக்கை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தனர். ஆல்ட்டோ காரை ஓட்டி வந்தவரும் காயமடைந்தார். சம்பவத்தை பார்த்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது வழியிலேயே கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். ட்ரையம்ஃப் டேடோனா பைக்கை ஓட்டி வந்தவர் படுகாயங்களுடனும், மாருதி ஆல்ட்டோ காரை ஓட்டி வந்தவர் காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் இரண்டு சூப்பர் பைக்குகளும் சுக்கு நூறாக நொறுங்கின. மாருதி ஆல்ட்டோ 800 காரின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்துக்கான காரணம், யார் மீது தவறு என்பது குறித்த செய்திகள் முழுமையாக கிடைக்கவில்லை.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. இதுபோன்ற விபத்துக்கள் மூலமாக எந்தளவு வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகமாக செயல்பட வேண்டும் என்பதே இந்த செய்தியை நாம் வெளியிடுவதற்கு காரணம். சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கான சிறந்த சாலை கட்டமைப்புகளும், சாலை விழிப்புணர்வு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுமே இவ்வாறான விபத்துக்கள் தொடர்கதையாக காரணமாகி உள்ளது.
சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு போதிய பயிற்சியை பெறுவது அவசியம். அத்துடன் வேகமாக செயல்படுவது அவசியம். அதேபோன்று, வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடை பிடிப்பதும் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும்.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...