Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாகன உற்பத்தியாளர்களுக்கு சோகம்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம்..
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ் 3 தர வாகனங்களின் விற்னைக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம் . அது குறித்த தகவல்களை காணலாம்.
நாடு முழுவதும் பாரத் ஸ்டேஜ்-3 தர இஞ்சின்கள் கொண்ட வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 8 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ள சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி என்ற யோகம் அடித்துள்ளது.
இந்தியாவில் வாகனப் புகை மாசுபாடு, பாரத் ஸ்டேஜ் ( பிஎஸ் ) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு ஆணையமானது ஏற்கெனவே அமலில் இருக்கும் பிஎஸ்-3 விதிக்கு பதிலாக பாரத் ஸ்டேஜ்-4 விதிகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் முழுமையாக பிஎஸ் 4 விதிகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது, பிஎஸ் 4 தர அளவிலான இன்ஜின் பொருத்திய வாகனங்களை மட்டுமே விற்கவோ பதிவு செய்யவோ முடியும்.
கெடு முடிய சில நாட்களே உள்ள நிலையில், தற்போது கையிருப்பில் உள்ள பிஎஸ்3 வாகனங்களை ஏப்ரல்1ஆம் தேதிக்கு பிறகும் விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்டொமொபைல் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கையிருப்பில் உள்ள பிஎஸ்3 வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அறிக்கை கேட்டது. கார்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என கிட்டத்தட்ட 8.24 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துவந்த உச்சநீதிமன்றம் தற்போது இறுதி தீர்ப்பை அளித்துள்ளது. இதில், பிஎஸ்- 3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. மேலும் மார்ச்31க்கு முன்பாக விற்பனை செய்திருந்தால் மட்டுமே அவற்றை ஏப்ரல்1ஆம் தேதிக்கு பிறகு பதிவு செய்யலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வணிக ரீதியான இழப்பை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தனர். வியாபாரத்தை விடவும் மக்களின் நலனே பெரிது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் 8.24 லட்சம் வாகனங்களின் விற்பனை தடை செய்யப்படுகிறது.
முன்னதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள், 96,000 வணிக ரீதியிலான வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் பிஎஸ்-3 தர வாகங்கள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் என சுமார் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
ஒருபக்கம் இழப்பை சந்தித்தாலும் அதனை ஓரளவுக்காவது சரிக்கட்ட தீர்மாணித்துள்ள டீலர்கள் சிலர் வாகனங்களுக்கு 5,000 முதல் 20,000 வரை தள்ளுபடி அளித்து வருகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 31ஆம் தேதிக்குள் கெடு முடிய உள்ளதால் சலுகை விலையில் வாகனங்களை வாங்குபவர்கள், வாகனப்பதிவிற்கு முறையான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்காவிட்டால் வாகனப்பதிவு செய்யப்படாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!