Just In
- 2 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
12 மணிநேரத்தில் டெல்லி- மும்பை... கனவை சாத்தியமாக்கிய டால்கோ ரயில்!
அதிவேக டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. ஆம். நேற்று டெல்லியிலிருந்து மும்பைக்கு இயக்கி சோதனை செய்யப்பட்ட டால்கோ ரயில் 12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை வந்தடைந்து.
இந்த சோதனை ஓட்டம் ரயில்வே துறையினரிடமும், ரயில் பயணிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், டெல்லி- மும்பை இடையிலான பயண நேரமும் பல மணி நேரம் குறையும் என்பதும் மிகுந்த ஆவலை தூண்டியிருக்கிறது.
சோதனை ஓட்டம்
டெல்லி- மும்பை இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில் ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கி இறுதி கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நடத்தப்பட்ட இரு சோதனை ஓட்டங்கள் மழை மற்றும் சிக்னல் பிரச்னைகளால் தாமதமடைந்தது.
திருப்திகரம்
இந்த நிலையில், மூன்றாவது சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. டெல்லியிலிருந்து பிற்பகல் 2.47 மணிக்கு புறப்பட்ட டால்கோ ரயில், இன்று அதிகாலை 2.54 மணிக்கு மும்பையை வந்தடைந்தது. அதாவது, 12 மணி 7 நிமிடங்களில் டால்கோ ரயில் டெல்லி- மும்பை இடையிலான தூரத்தை கடந்தது.
சரியான நேரம்
வழக்கத்திற்கு மாறான சில காரணங்களால் 7 முதல் 8 நிமிடங்கள் டால்கோ ரயில் தாமதமடைந்ததாகவும், சரியான பயண நேரம் என்று பார்த்தால் 12 மணிநேரத்தில் டால்கோ ரயில் கடந்து விட்டதாகவம் ரயில்வே துறை அதிகாரி விஜய் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேகம்
அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் டால்கோ ரயில் இந்த சோதனை ஓட்டத்தின்போது இயக்கப்பட்டிருக்கிறது. மேலும், இலக்கு வைக்கப்பட்ட பயண நேரத்திற்குள்ளாகவே டால்கோ ரயில் வந்து சேர்த்தகாவும் விஜய் குமார் கூறினார்.
அடுத்து...
வரும் 12ந் தேதி டெல்லி- மும்பை இடையில் கடைசி சோதனை ஓட்டம் நடத்தப்படப்பட இருக்கிறது. பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் மும்பையை நள்ளிரவு 2.23 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 11 மணி 38 நிமிடங்களில் இரு நகரங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகம்
கடைசி சோதனை ஓட்டம் மணிக்கு 150 கிமீ வேகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், வளைவுகளில் வேகத்தை கூட்டி சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் திருப்திகரமாக அமைந்தால், விரைவாகவே டால்கோ ரயில்கள் இயக்கும் வாய்ப்பு ஏற்படும்.
பயண நேரம்
தற்போது டெல்லி- மும்பை இடையில் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்கள் 17 மணி நேரத்தில் இரு நகரங்களையும் கடக்கிறது. ஆனால், டால்கோ ரயில்கள் 11 மணி 38 நிமிடங்களிலேயே கடந்துவிடும் என்பதால், பயண நேரம் 5 மணிநேரத்திற்கும் மேலாக குறையும்.
அதிவேக ரயில்
சோதனை ஓட்டங்கள் குறித்த அறிக்கைகள் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படும். அதன்பிறகு, டெல்லி- மும்பை மட்டுமின்றி, டெல்லி- சென்னை, டெல்லி- கொல்கத்தா ஆகிய நீண்ட தூர வழித்தடங்களில் டால்கோ ரயில்கள் விடப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.