Just In
- 54 min ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 1 hr ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விரைவில் அறிமுகமாகும் புதிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!
விரைவில் பயணிகள் சேவைக்கு வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு ரயில்வேத் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வரிசையில், பல நவீன வசதிகளுடன் ரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை- கோவா இடையில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது தேஜஸ் ரயில் டெல்லி- சண்டிகர் இடையில் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 130 கிமீ வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாக இருக்கும்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்சிடி தகவல் பலகைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பயணிகளுக்கு வைஃபை இன்டர்நெட் வசதியும் இருக்கும். இதுதவிர, பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.
மெட்ரோ ரயில்களை போன்றே, இந்த ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வரும் இந்தியாவின் முதல் ரயிலும் தேஜஸ்தான்.
இதேபோன்று, ரயில் பெட்டிகளுக்கு இடையில் மிகவும் பாதுகாப்பான இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பயணிகள் அச்சமின்றி, ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்ல முடியும்.
சதாப்தி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை போன்றே, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் உணவுக்கான கட்டணம் சேர்த்தே வசூலிக்கப்படும். நட்சத்திர அந்தஸ்துடைய உணவு தயாரிப்பு நிபுணர்கள் இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கான உணவுப் பட்டியலை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
இந்த ரயிலில் காபி, டீ வழங்கும் தானியங்கி எந்திரங்களும் உண்டு. புத்தகங்கள், தின்பண்டங்களை வைப்பதற்கு சிறிய மேஜையும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த ரயில் பெட்டிகளில் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறை தகவல் பலகைகள், ரயில் நிலையங்கள் பற்றி தகவல் தரும் மின்னணு தகவல் பலகைகள், பயணிகள் பட்டியல் குறித்த தகவல் தரும் மின்னணு பலகைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த ரயிலில் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், தண்ணீர் அளவை காட்டும் வசதியும் இருக்கும். கைகளை உலர வைப்பதற்கான எந்திரமும் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய தேஜஸ் ரயில் பெட்டிகளில் மிகவும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் தீ பிடிப்பதை கண்டறியும் சாதனம், தீயணைப்பு சாதனம், எச்சரிக்கை சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், தீப்பிடித்தால், தானியங்கி பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தும் வசதியும் உண்டு.
புதிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பிரத்யேகமான மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு வண்ணக் கலவை வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கவர்வதாக உள்ளது. இந்த ரயில் பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று நம்பலாம்.