Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!
கேரளாவில் எஞ்சினியரிங் ஒர்க்ஸ் நடத்தி வரும் ஒருவர் சொந்த முயற்சியில் ஹெலிகாப்டரை தயாரித்து அசத்தி உள்ளார்.
நம் நாட்டில் பறக்கும் வாகனங்களை சொந்தமாக தயாரிக்கும் கனவை நனவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பழனி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பாரா கிளைடர் தயாரித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி சாதித்துள்ளார். கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள கஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதாசிவன்[54]. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிப்பதற்காக, ஹெலிகாப்டர் மாதிரி ஒன்றை உருவாக்கி தருமாறு அங்குள்ள தனியார் பள்ளியின் முதல்வர் சதாசிவனிடம் கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட சதாசிவனுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.
அந்த ஹெலிகாப்டரை மாதிரி மாடலாக இல்லாமல், பறப்பதற்கு ஏதுவான அம்சங்களுடன் உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு எழுந்துள்ளது. அதன்படி, அந்த ஹெலிகாப்டரை பறப்பதற்கு தகுதியான அம்சங்களுடன் வடிவமைத்து உள்ளார். தற்போது அந்த தனியார் பள்ளியில் இந்த ஹெலிகாப்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஹெலிகாப்டரை 4 ஆண்டுகள் அயராத முயற்சியில் சதாசிவன் உருவாக்கி உள்ளார். இந்த ஹெலிகாப்டரில் மாருதி 800 காரின் எஞ்சினை பொருத்தி இருப்பதாக சதாசிவன் தெரிவித்துள்ளார். உட்புறத்தில் இரும்பு பாகங்களும், வெளிப்புறத்தில் அலுமினிய பாகங்களும் பயன்படுத்தி இருக்கிறார்.
இதில், வேடிக்கையான விஷயம் ஆட்டோரிக்ஷாவின் முன்பக்க கண்ணாடியை வாங்கி இந்த ஹெலிகாப்டரில் விண்ட்ஷீல்டாக பொருத்தி இருக்கிறார் சதாசிவன். இந்த ஹெலிகாப்டர் பறப்பதற்கு உண்டான அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதாக கூறியிருக்கும் அவர், பறக்கவிட்டு சோதனை செய்வதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஹெலிகாப்டரை சோதனை ஓட்டம் நடத்தும் திட்டத்துடன் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சதாசிவன். கஞ்சிரப்பள்ளியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் பறக்கவிட்டு சோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
மேலும், ஹெலிகாப்டர் மாதிரியை செய்யச் சொல்லி கேட்ட அதே பள்ளியில்தான் சதாசிவனின் மகளும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு வரை படித்து, தற்போது சுயமாக ஹெலிகாப்டர் தயாரித்து காட்டி இருக்கும் சதாசிவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?