Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டைகர் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
வன ஆர்வலர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் கவரும் விதத்தில், டைகர் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 5ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு வரும் அக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் சேவையை துவங்க உள்ளது. இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
விசேஷ சுற்றுலா
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் பந்தவ்கர் மற்றும் கன்ஹா தேசிய வன விலங்கு பூங்காக்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த இரு வன விலங்கு பூங்காக்களிலும் புலிகள் அதிக அளவில் காணப்படுகிறது.
டைகர் எக்ஸ்பிரஸ்
புலிகள் சரணாலய பகுதிக்கு இயக்கப்படுவதாலும், அருகி வரும் விலங்கினமான புலிகள் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் விதத்திலும் இந்த ரயிலுக்கு டைகர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சொகுசு வசதிகள்
இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டது. சாப்பாட்டு கூடம், சிறிய நூலகம், ரெஸ்ட் ரூம் போன்றவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலா அட்டவணை
டெல்லியிலிருந்து புறப்பட்டு மத்திய பிரதேசம் செல்லும் இந்த ரயில் 5 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட பயணத் திட்டத்துடன் இயக்கப்படும். ரயில் அல்லாமல், உணவுடன் சேர்த்து மூன்று இரவுகள் 3 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
சுற்றுலா இடங்கள்
ரயிலிலிருந்து இறங்கியவுடன் பயணிகள் வன விலங்கு பூங்காக்களில் சுற்றுலா செல்வதற்கு வாகன வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இதில், மூன்று முறை புலிகளை காண்பதற்கான டைகர் சஃபாரி பயண திட்டமும் அடங்கும். தவிரவும், ஜபல்பூர் அருகிலுள்ள துவாதர் நீர்வீழ்ச்சிக்கும் பயணிக்கும் வாய்ப்பும் உண்டு.
கட்டணம்
இந்த சொகுசு ரயிலில் பயணிப்பதற்கு ரூ.33,500 முதல் ரூ.49,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினருக்கு டைகர் சஃபாரிக்காக ரூ.4,000 கூடுதலாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் காணலாம்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?