Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலக கவனம் பெறும் சீனாவின் லிஸிபா மோனோ இரயில் நிலையம்
சீனாவின் முக்கிய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இரயில் நிலையம் உலக கவனம் பெற்றுள்ளது, எதற்காக என்பதை இனி பார்க்கலாம்.
நல்ல தூக்கத்தில் இருக்கும் உங்களுக்கு இரயிலில் பயணிப்பது போல கனவு வருகிறது, ஏனோ தூக்கத்தின் ஆழத்தில் காண்பது கனவாக தெரியவில்லை. திடீரென்று இரயிலின் சப்தம் அதிகரிக்க, அந்த ஒலியை கண்களை தாண்டி காது, மூக்கு, உடல் என அனைத்திலும் உணர்கீறீர்கள். திடுக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து தலைக்கு பின் பார்த்தால், நிஜமாகவே ஒரு குட்டி இரயில் உங்களை கடந்துசெல்கிறது.
கனவில் பார்த்த ஒரு காட்சியை நிஜத்தில் உடனே பார்க்க நேர்ந்தால் நாம் சிலிர்ப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம். ஆனால் தென் - கிழக்கு சீனாவில் இருக்கும் சங்க்குயிங் பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சர்வ சாதரணமாக இந்த நிலையை கடந்து செல்கின்றனர்.
சங்க்குயிங் நகரத்தின் லிஸிபா என்ற மோனோ இரயிலின் நிலையமே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் அமைந்துள்ளது. 31000 சதுரடி பரப்பளவில் மலை, நதி என ஒரு மேஜிக் ஃபீலிங்கை தரும் இந்த நகரத்தின் மக்களுக்கு இந்த இரயில் நிலையம் முக்கிய போக்குவரத்தாக உள்ளது.
19 மாடி அடுக்கத்தின் ஆறு முதல் எட்டாம் தளங்கள் வரை லிஸிபா மோனோ இரயில் நிலையம் அமைந்துள்ளது. இடப்பற்றாக்குறையை போக்கவே இதனை வடிவமைத்த கட்டட பொறியாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பை இடிக்காமல் இந்த இரயில் நிலையத்தை அமைத்துள்ளனர்.
போகுவரத்து நெரிசலை தவிர்க்க சீனாவின் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ இரயில்கள் இயங்கினாலும், மோனோ இரயில்களும் இருக்கின்றன. ஆனால் லிஸிபா பகுதியில் இடப்பற்றக்குறையை போக்க மோனோ இரயில் நிலையத்தை குறுகிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்னும் குறுகிய வட்டத்தில் அமைத்திருக்கின்றனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரயில் நிலையமா? என்பது நமக்கு ஆச்சர்யமாக இருப்பதுபோல, அந்த குடியிருப்பு வாசிகளுக்கும் ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ஆனால் லிஸிபா மோனோ இரயில் நிலையத்தின் சிறப்பே, குறிபிட்ட நிலையத்திற்கு வந்துவிட்டால், அதிலிருந்து ஒலி வராது என்பது தான்.
ஒலி அதிகரிப்பை குறைக்க, ஒலியை உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் லிஸிபா மோனோ இரயில் நிலையத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன. இரயில் நிலையத்திற்கு வரும்போதும், அங்கியிருந்து புறப்படும் போதும், பாத்திரங்களை கழுவும்போது எழக்கூடிய சத்தம் போன்று தான் இரயிலின் நகர்வு நமக்கு கேட்கும்.
இரயில் நிலையம் தங்களது வீடுகளுக்கு இடையில் அமைக்கப்படுவதை முதலில் அந்த குடியிருப்பு வாசிகள் எதிர்த்திருக்கிறார்கள், ஆனால் இப்படி ஒரு கட்டமைப்பு குறித்து எல்லா தரப்பினரிடமும் எழுந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பை பார்த்ததும், அடுக்குமாடியின் உரிமையாளர்கள் இரயில் நிலைய கட்டுமானத்திற்கு ஒகே சொல்லியிருக்கிறார்கள்.
கட்டுமான கலை, ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகிற்கே எடுத்துக்காட்டாக உருவாகியுள்ளது லிஸிபா மோனோ இரயில் நிலையம்.
சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து முன்மாதிரிகள் அமைக்கப்படவேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்ப உலகில் சர்வதேசளவில் முன்னணி நாடாக உள்ள சீனா, போக்குவரத்தை இடம் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு கட்டமைப்பதில் சிறந்து விளங்குகிறது.
தன் நாட்டிலுள்ள ஜனத்தொகையை கருத்தில்கொண்டு மோனோ இரயில் பயன்பாட்டில் புதிய நிபுணத்துவத்தை செய்து காட்டிய சீனா, அதே மோனோ இரயில் சேவையில் பறக்கும் இரயில் சேவை என்பதை உருவாக்கியுள்ளது.
வெற்றிகரமாக மக்களின் பயன்பாட்டில் உள்ள பறக்கும் இரயில் சேவையை இந்தியா போன்ற நாடுகளும் பின்பற்றினால், போக்குவரத்து இடையூறுகள் சற்று குறைந்த அளவில் இருக்கும்.
வாசகர்கள் படித்து வரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்
- மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக் அறிமுகம்
- அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்
- 18 மாதங்களாக தயாரிக்கப்பட்ட கஸ்டமைஸ் மோட்டார் சைக்கிள்
- வெளியே வர முடியாமல் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்!!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!