Just In
- 23 min ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 45 min ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 1 hr ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 1 hr ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
Don't Miss!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்த 4 விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் நிரந்தர ரத்து: கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு..!!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வாகனம் ஓட்டும்போது இனி வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை ஏற்றார்.
இந்த கூட்டத்தில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்மூலம், உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு முன்வைத்துள்ள சில பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
1.) சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இனி அவர்களது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
2.) சாலையில் போக்குவரத்து காவலர்கள் ஆய்வின் போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டும்.
3.) காப்பீடு சான்றிதழ் இல்லையெனில், வாகனங்கள் போக்குவரத்து காவலர்களால் சிறைபிடிக்கப்படும்.
4.) காப்பீட்டை புதுபிக்க தவறியவர்களுக்கும் இந்த விதி பொறுந்தும்.
5.) செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
6.) சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
7.) சூழ்நிலையை பொறுத்து வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் நிரந்தமாகவும் ரத்து செய்யப்படும்.
8.) வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும்.
9.) வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும்.
மேலும் கனரக வாகனங்களுக்கும் சில கட்டுபாடுகளை இந்த குழு விதித்துள்ளது.
அதன்படி, டிரக், லாரி மினிவேன், பிக் அப் போன்ற கனரக வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுவதும் போக்குவரத்து விதிமீறல் தான்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கனரக வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிகமாக அல்லது விதிமீறலை பொறுத்து நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
மாநில சாலைப் பாதுகாப்புக் குழு விதித்துள்ள இந்த கட்டுபாடுகள் வாகன ஓட்டிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதை சரியாக மக்கள் பின்பற்ற தமிழகளவில் உள்ள பாதிப்படைந்த சாலைகளில் சில அடிப்படை சீரமைப்பு பணிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை வைக்கின்றனர்.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!