Just In
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் சிங்கக்கூட்டம் - வாகன ஓட்டிகளே உஷார்..!
தேசிய நெடுஞ்சாலையில் சிங்கக்கூட்டம் ஒன்று சுற்றிவருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
சாலைகளில் கேட்பாறற்று சுற்றித்திரியும் கால்நடைகள் மூலம் போக்குவரத்து தடைபடுவது இந்தியாவில் அன்றாடம் நாம் காணக்கூடிய ஒரு செயல் தான். ஆனால் இந்த அரிய வகை காட்டு விலங்குகளால் சாலையில் வாகனங்கள் மறிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.
காட்டை ஒட்டி இருக்கக்கூடிய சாலைகளில் யானைக் கூட்டங்களால், அல்லது வேறு சில மிருகங்களால் போக்குவரத்து தடை ஏற்படுவது என்பது பொதுவான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நாமும் இவற்றை செய்திகளில் கண்டிருப்போம்.
ஆனால் கொலைகார மிருகங்கள் எனக் கருதப்படும் சிங்கங்களால் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டிருப்பது கேட்கவே வினோதமாக இருக்கிறது. ஏனெனில் சிங்கங்களை அவ்வளவு எளிதில் யாரும் பார்த்து விட முடியாது. இவை ஆள்நடமாட்டமில்லா தொலைதூர பிரதேசங்களில் வசிக்கக்கூடியவை.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள பிபாவாவ் - ரஜூலா தேசிய நெடுஞ்சாலையில் அபூர்வ வகை என கருதப்படும் ஆசிய வகை சிங்கங்களால் வாகனங்கள் மறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
ஆசிய வகை சிங்கங்களை, இந்திய சிங்கம் அல்லது பெர்சிய சிங்கம் என் இந்தியாவில் காணப்படும் இந்த வகை சிங்கங்கள் இந்தியாவில் அரிதாகி வரும் விலங்கினப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்த வகை சிங்கக் கூட்டம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்த்வதோடு அவைகளால் மனித உயிர்களுக்கும், வாகனஓட்டிகளால் அவற்றின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்குவதாக உள்ளது.
இந்த சிங்கங்கள் குஜராத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரிவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடீயோவில் இருசக்கர வாகன ஓட்டிகள் காட்டின் ராஜாவான சிங்கள்களிடம் மிக நெருக்கமாக சென்று தங்கள் மொபைலில் படம்பிடிப்பது பதிவாகியுள்ளது. ஒரு நொடியில் கூட அவை இவர்களை அடித்துவிடும் வாய்ப்பு இருப்பதை உணராமல் இந்த இளைஞர்கள் மொபைலில் படம்பிடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பு மூலம் ஆசிய சிங்கங்கள் அரிதான விலங்கின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை சொற்ப அளவில் இருப்பதோடு குறைந்து வருவதும் கவலையளிக்கும் விஷயமாகும்.
குஜராத்தில் உள்ள 20,000 சதுர கிமீ பரப்பளவிலான கிர் காடுகளில் 2015ஆம் ஆண்டு சிங்கங்கள் குறித்து எடுக்கப்பட்ட 14வது ஆசிய கணக்கெடுப்பில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 523 என்பது தெரியவந்தது. இதில் 109 ஆண், 201 பெண் மற்றும் 213 குட்டிகள் ஆகும்.
சிங்கங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் அனாயசமாக உலவுவதால் வேகமாக கடக்கும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடீயோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!