Just In
- 32 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மல்லையாவுக்கு 3 மணிநேரத்தில் ஜாமீன்... கார் ஓட்டி 2 பேரை கொன்ற பெண்ணுக்கு ஒரு மணிநேரத்தில் ஜாமீன்!
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மூன்று மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், புனேயில் விபத்தை ஏற்படுத்திய பெண் ஒருவருக்கு ஒரு மணிநேரத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை புனே நகரில் நடந்த விபத்து ஒன்றின் சிசிடிவி கேமரா காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்கச் செய்தது. அங்குள்ள ஷாப்பிங் மால் எதிரில் சாலையை கடப்பதற்காக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் நின்றிருந்த 5 பேர் மீது அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் சாலை தடுப்பில் நின்று கொண்டிருந்த 3 வயது குழந்தை உள்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில், இஷா என்ற குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அந்த குழந்தையின் தாயார் பூஜா உள்பட மற்ற 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், பூஜா சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல் இப்போது கிடைத்துள்ளது.
இந்த பயங்கர விபத்து தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்தவர் சுஜாதா ஜெய்பிரகாஷ் ஷெரோஃப் என்ற பெண்மணி என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.
அதில், காரை ஓட்டும்போது திடீரென அயர்ந்து விட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதேநேரத்தில், காரை ஓட்டும்போது சுஜாதா ஜெய்பிரகாஷ் போனில் பேசியபடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
கைது செய்யப்பட்ட ஒரு மணிநேரத்தில் சுஜாதாவுக்கு போலீசார் ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. இதுதான் தற்போது பலருக்கும் கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மூன்று மணிநேரத்தில் ஜாமீன் தரப்பட்டது.
இது பெரும் விவாதப் பொருளாக இருந்தது. இந்த நிலையில், கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பெண்ணிற்கு கைது செய்யப்பட்டு ஒரு மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரமும் இப்போது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
கார் ஓட்டி இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுஜாதா புனே நகரை சேர்ந்த ஷெரோப் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா