Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
உலகின் மிகப்பெரிய 'மிதக்கும் மாளிகை' அறிமுகம் - சிறப்பம்சங்கள்!
உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகை அமெரிக்காவை சேர்ந்த 4யாட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கோடீஸ்வரர்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருங்கே ஈடு செய்யும் விதத்தில், அத்துனை சிறப்பம்சங்களுடன் இந்த பிரம்மாண்ட மிதக்கும் மாளிகையை கட்டி வருவதாக 4யாட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
டிசைனர்
ஆடம்பர படகு வடிவமைப்பில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கிறிஸ்டோபர் செய்மர் இந்த ஆடம்பர படகின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
வடிவம்
டபுள் செஞ்சூரி என பெயரிபட்டப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு 200 மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆடம்பர படகு இரண்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான பரப்பளவை கொண்டிருக்கும். மேலும், 8 அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரத்தை கொண்டிருக்கிறது. அதாவது, தண்ணீர் மட்டத்திலிருந்து 26 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயனின் அஸ்ஸாம் என்ற ஆடம்பர படகுதான் உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகாக இருந்து வருகிறது. இது 180 மீட்டர் நீளம் கொண்டது. இதனை டபுள் செஞ்சூரி விஞ்சும் என தெரிவிக்கப்படுகிறது.
வசதிகள்
7 அடுக்குகள் கொண்டதாக கட்டப்படும் இந்த டபுள் செஞ்சூரி ஆடம்பர படகில், 50 சூட் அறைகள், நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு பூங்கா, ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் நிறுத்துவதற்கான ஆங்கர் ஆகியவை இருக்கும்.
விருந்தினர்கள்
இந்த ஆடம்பர படகில் 126 விருந்தினர்களும், 100 பணியாளர்களும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. மேலும், பணியாளர்கள் மொபைல்போன் அப்ளிகேஷன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பணிகளை செவ்வனே செய்வதற்கான வசதியும் உண்டு.
விலை விபரம்
டபுள் செஞ்சூரி ஆடம்பர படகிற்கு 770 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆர்டர் கொடுத்தால் 4 ஆண்டுகளில் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?